தமிழ் சினிமாவின் முன்னணி குணச்சித்திர நடிகைகளில் ஒருவராக திகழும் லட்சுமி ராமகிருஷ்ணன், பெண் இயக்குநர்களில் முக்கியமானவராகவும் திகழ்கிறார். இவர் இயக்கிய நான்கு படங்களும் வெவ்வேறு ஜானர் படங்களாகவும், சமூகத்திற்கு தேவையான விஷயங்கள் பேசுபவையாகவும் அமைந்தது. மேலும், லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய ‘ஹவுஸ் ஓனர்’ படம் பெரும் பாராட்டுப் பெற்றது.
நடிகை மற்றும் இயக்குநராக மட்டும் இன்றி, தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலமாக தமிழக மக்களின் குடும்பத்தில் ஒருவராகவும் திகழும், லட்சுமி ராமகிருஷ்ணன், தைரியமாக தவறுகளை சுட்டிக்காட்டி வருகிறார். அந்த வகையில், பெண்களுக்கு நிகழும் பாலியல் கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்.
இந்த நிலையில், தனக்கு சிறுவயதில் ஏற்பட்ட பாலியல் சீண்டல்கள் குறித்து பேட்டி ஒன்றில் பேசிய லட்சுமி ராமகிருஷ்ணன், தனது மகளுக்கு நேர்ந்த பாலியல் கொடுமை பற்றி தெரிவிக்க, அதனால் ஒட்டு மொத்த திரையுலகமே அதிர்ச்சியடைந்திருக்கிறது.
இது குறித்து பேட்டியில் பேசிய லட்சுமி ராமகிருஷ்ணன், ”நான் சிறுவயதில் இருக்கும் போது, எனது தந்தை வயதுடைய எனது உறவினர் அவரது ஆண் உறுப்பை என்னிடம் காட்டுவார். ஆனால், அப்போது எனக்கு அவர் என்ன செய்கிறார், என்று தெரியவில்லை. வளர்ந்த பிறகு தான் தெரிந்தது அவர் எவ்வளவு பெரிய வக்கீரபுத்திக்காரர் என்று, மேல்தட்டில் இருக்கும் எனக்கே இப்படி ஒரு பாலியல் சீண்டல்கள் நடக்கிறது என்றால், கீழே இருக்கும் பெண்களின் நிலை என்ன என்று யோசித்து பாருங்கள்.
நான் சொல்வது பழைய கதை தானே என்று சிலர் நினைப்பீர்கள், ஆனால் இப்போதும் இதுபோன்ற கொடுமைகள் நடக்கத்தான் செய்கிறது. எனது மகள் லிப்ட்டில் வரும் போது ஒருத்தன், அவனது பேண்ட்டை கழட்டியிருக்கிறான். லிப்ட்டுக்குள் இருக்கும் எனது மகள் என்ன செய்வது என்று தெரியாமல் அதிர்ச்சியடைந்ததோடு, அங்கிருந்து அழுதுக்கொண்டே ஓடி வந்து என்னிடம் கூறினால். ஆனால், அங்கிருந்த கேமராவில் அவனது முகம் சரியாக பதியவில்லை. இப்படி பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் கொடுமைகள் தொடர்ந்துக் கொண்டு தான் இருக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.
சமூகத்தில் பிரபலமாக இருப்பவர்கள் தங்களது வாழ்க்கையில் நடக்கும் கசப்பான சம்பவங்கள் குறித்து பேசுவதில்லை. ஆனால், லட்சுமி ராமகிருஷ்ணன் தைரியமாக தனக்கும் தனது மகளுக்கும் நடந்த இந்த கொடுமைகளை தைரியமாக பேசியிருப்பதால் அவருக்கு பலர் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான "தீமா தீமா" , “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...
காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...
’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...