Latest News :

உயிரிழந்த இயக்குநரின் ஆசையை நிறைவேற்றும் சி.வி.குமார்!
Sunday May-17 2020

இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அருண் பிரசாத் என்பவர், ‘4ஜி’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாக இருந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு நடந்த விபத்தில் அவர் உயிரிழந்த சம்பவம் தமிழ் சினிமாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடித்திருக்கும் ‘4ஜி’ படத்தை இயக்கி முடித்துவிட்டு, ரிலீஸுக்கான பணியில் ஈடுபட்டிருந்த அருண் பிரசாத்தின் இறப்பு குறித்து ‘4ஜி’ படத்தின் தயாரிப்பாளர் சி.வி.குமார் பேட்டி ஒன்றில் கூறுகையில், ”அருண் பிரசாத் ஆன்மீகத்தில் அதிகம் ஈடுபாடு உள்ளவர். எப்போதும் கோவில், சித்தர்கள் என்றே இருப்பார். அவருடன் சேர்ந்து நானும் பல கோவில்களுக்கு சென்றிருக்கிறேன். சித்தர்கள் மீது உள்ள ஈடுபாட்டினால் தான் தனது பெயரை வெங்கட் பாக்கர் என்று மாற்றிக் கொண்டார். பிறகு சித்தர்களின் பெயரை வைத்துக் கொள்ள கூடாது என்று கூறி, மீண்டும் அருண் பிரசாத் என்றே டைடில் கார்டில் போடுமாறும் கூறினார்.

 

அருண் பிரசாத்தும் நானும், இயக்குநர் தயாரிப்பாளர் போல அல்லாமல், நண்பர்களாகவே பழகினோம். அவரது இறப்பை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவரது முகத்தை கடைசியாக பார்க்க வேண்டும் என்று கோவைக்கு போக முயற்சித்தேன். ஆனால், அனுமதி கிடைக்கவில்லை. ‘4ஜி’ படத்தை அருண் பிரசாத் முடித்துவிட்டு ரிலீஸ் பணிகளில் ஈடுபட்டு இருந்த போது தான் கொரோனா வந்துவிட்டது. பிறகு, படத்தை ஒடிடி தளம் ஒன்று கேட்டது. இது பற்றி அருணிடம் நான் கேட்டேன். அவர் எனது முதல் படம் தியேட்டரில் ரிலீஸ் ஆக வேண்டும் என்று தான் சார் விரும்புகிறேன், இருந்தாலும் நீங்கள் கேட்கிறீர்கள், படத்தின் டீசரை ஒடிடி நிறுவனத்திற்கு அனுப்புங்கள், என்றார்.

 

4G

 

படத்தின் டீசரை பார்த்துவிட்டு ஒடிடி நிறுவனமும் சம்மதம் தெரிவித்துவிட்டார்கள். இன்னும் 10 நாட்களில் படத்தை ஒடிடி தளத்தில் ரிலீஸ் செய்வதற்கான பணியில் ஈடுபட்டு இருந்தோம். அதற்குள் இப்படி ஆகிவிட்டது. எனவே, அருண் பிரசாத்தின் ஆசையை நிறைவேற்றுவதற்காக, ஒடிடி நிறுவனத்திடம் பேசி, ‘4ஜி’ படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்ய போகிறேன். என்ன பிரச்சினை வந்தாலும் அதை எதிர்க்கொண்டு படத்தை நிச்சயம் தியேட்டரில் தான் ரிலீஸ் செய்வேன்.” என்று தெரிவித்துள்ளார்.

Related News

6578

காமெடி நடிகர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ‘கலப்பை மக்கள் இயக்கம்’!
Thursday November-20 2025

பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...

’மாண்புமிகு பறை’ தலைப்பே ஆழமாக சிந்திக்க வைக்கிறது - தொல்.திருமாவளவன் பாராட்டு
Thursday November-20 2025

அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...

ஆதரவற்றோர் இல்லத்தில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அருண் விஜய்!
Wednesday November-19 2025

தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...

Recent Gallery