படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தினால் கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ படப்பிடிப்புக்கு தடை ஏற்பட்ட நிலையில், தற்போதைய கொரோனா பிரச்சினையால் மீண்டும் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பதே தெரியவில்லை. இதற்கிடையில், கமல்ஹாசன் இரண்டு வருடங்களுக்கு தொடங்கி பிறகு கிடப்பில் போடப்பட்ட ‘தலைவன் இருகின்றான்’ படத்தை மீண்டும் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.
கொரோனா பிரச்சினை முடிவுக்கு வந்து திரைப்பட படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கப்படும் போது, ‘இந்தியன் 2’ படப்பிடிப்பை தொடங்கி விரைவாக முடித்துவிட திட்டமிட்டுள்ள கமல்ஹாசன், பிறகு ‘தலைவன் இருக்கின்றான்’ படத்தின் படபிடிப்பை தொடங்க இருக்கிறாராம்.
ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் கமல்ஹாசன் தயாரித்து இயக்கும் இப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருப்பதோடு, இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தமாகியிருக்கிறாராம். அதேபோல் வடிவேலும் இப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ‘தலைவன் இருக்கின்றான்’ படத்தில் மூன்று கதாநாயகிகள் கதாப்பாத்திரம் இருப்பதாகவும், அதில், ரேவதி, ஆண்ட்ரியா மற்றும் பூஜா குமார் ஆகியோர் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இப்படி ‘தலைவன் இருக்கின்றான்’ படம் குறித்து அவ்வபோது சில தகவல்கள் வெளியானாலும், இவை யாவும் அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான "தீமா தீமா" , “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...
காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...
’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...