தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகவும், தொகுப்பாளியாகவும் இருப்பவர்கள் அங்கிருந்து தாவி சீர்யல் நடிகையாகி பிறகு வெள்ளித்திரை வாய்ப்பு பெறுவதற்கு பல்வேறு வகையில் முயற்சி செய்து வரும் நிலையில், ஒரு நடிகை வித்தியாசமாக திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி, பிறகு அங்கிருந்து செய்தி வாசிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளினி என்று இறங்கி தற்போது சீரியல் நடிகையாக பிரபலமாகியிருக்கிறார்.
இப்படி எதிமறையான அந்த நடிகைக்கு தற்போதும் சினிமா வாய்ப்புகள் பல வந்தாலும், “சினிமா வேண்டவே வேண்டாம், ஆள விடுங்க...” என்று அலறி ஓடுகிறாராம்.
கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான ‘ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சரண்யா தொரடி சுந்தர். அப்படத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதை தவிர்த்த இவர், பல தமிழ் தொலைக்காட்சிகளிலும், தெலுங்கு தொலைக்காட்சிகளிலும் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றியதோடு, செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றி வந்தார். பிறகு சீரியல்களில் நடிக்க தொடங்கியவர் மக்களிடம் பிரபலமானார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ’நெஞ்சம் மறப்பதில்லை’ சீரியல் மூலம் தமிழக மக்களிடம் பிரபலமான சரண்யாவுக்கு தற்போதும் ஏகப்பட்ட சினிமா வாய்ப்புகள் வந்தாலும், அவர் அனைத்தையும் நிராகரித்து வர, இது பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரிடம் கேட்ட போது, “சினிமா எனக்கு செட் ஆகாது என்று தோன்றுகிறது. சினிமா மூலம் கிடைக்கும் பணமும், புகழும் என்னை பயமுறுத்துகிறது. கதை கேட்பது, புது புது குழுவுடன் பணிபுரிவது, போன்ற விஷயங்கள் எனக்கு செட் ஆகாது. அதனால் எனக்கு இதுவே போதும்.” என்று தெரிவித்துள்ளார்.

சினிமாவில் நடிப்பதை தவிர்க்கும் சரண்யா, அதற்கான காரணமாக இப்படி சொல்லியிருந்தாலும், அவர் தனது முதல் படத்தின் மூலம் சில கசப்பான அனுபவங்களை எதிர்கொண்டிருக்க கூடும், அதனால் தான் சினிமா வேண்டாம் என்று கூறுகிறார், என்றும் சீரியல் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.
பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான "தீமா தீமா" , “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...
காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...
’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...