சீரியல் தயாரிப்பாளர்களுக்கு வந்த புது சிக்கல்!
Sunday May-24 2020

கொரோனா ஊரடங்கு காரணமாக திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்களின் படப்பிடிப்புகள் சுமார் 60 நாட்களுக்கு மேலாக நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், சீரியல்களின் படப்பிடிப்புக்கு அனுமதி வழங்க வேண்டும், என்று சீரியல் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடப்பட்டது.

 

அதேபோல், திரைப்பட தயாரிப்பாளர்களும் திரைப்படங்களின் படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்க வேண்டும், என்றும் தமிழக முதல்வரிடம் கோரிக்கை விடுத்தனர். 

 

இவர்களின் சீரியல் படப்பிடிப்புக்கு அரசு சமீபத்தில் அனுமதி வழங்கியது. 20 பேர்களுடன், படப்பிடிப்பு தளம் அல்லது வீடுகளில் படப்பிடிப்பு நடத்தி கொள்ளலாம் என்றும், பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்தக் கூடாது, என்றும் கூறப்பட்டது.

 

அரசின் இந்த அனுமதியால் சீரியல் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியடைந்தாலும், சில சீரியல் தயாரிப்பாளர்கள் அனுமதி கிடைக்கும் சோகமாகவே இருக்கிறார்கள். காரணம், அவர்களால் உடனே படப்பிடிப்பு தொடங்க முடியாத அளவுக்கு புதிய சிக்கலில் சிக்கியுள்ளார்கள்.

 

அதாவது, பெரும்பாலான தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கும் ஹீரோ மற்றும் ஹீரோயின்கள் ஐதராபாத் அல்லது பெங்களூர் நகரை சேர்ந்தவர்களாகத்தான் இருக்கிறார்களாம். படப்பிடிப்பின் போது மட்டும் சென்னைக்கு வருகிறவர்கள், படப்பிடிப்பு முடிந்ததும் தங்களது இறுப்பிடமான வெளிமாநிலங்களுக்கு சென்றுவிடுகிறார்களாம்.

 

மற்ற நேரங்களில் இது பெரிய பிரச்சினை இல்லை. ஆனால், தற்போதைய கொரோனா காலத்தில், வெளிமாநிலத்தில் இருந்து ஒருவர் தமிழகம் வருகிறார் என்றால், அவர் 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும். அதே சமயம், இங்கு தனிமைப்படுத்தப்பட்டவர், மீண்டும் அவர்களின் இருப்பிடத்திற்கு செல்லும் போது அங்கேயும் 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும், என்ற நிலை இருப்பதால், சீரியல்களின் ஹீரோ மற்றும் ஹீரோக்கள் தற்போது நடிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளதாம்.

 

இதனால், வெளிமாநில நடிகர், நடிகைகளை தங்களது சீரியல்களில் நடிக்க வைத்த தயாரிப்பாளர்கள் தொடர்ந்து எப்படி படப்பிடிப்பு நடத்துவது என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார்களாம். அதே சமயம், சம்மந்தப்பட்ட தொலைக்காட்சி படப்பிடிப்பை விரைவில் தொடங்க வேண்டும் என்று அழுத்தம் கொடுக்க, கதையை மாற்றலாமா என்றும் சிலர் யோசித்து வருகிறார்களாம்.

Related News

6605

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Thursday March-19 2026

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’)  திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான  "தீமா தீமா" ,  “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...

யோகி பாபுவின் வண்டியை உரிமை கொண்டாடும் கூட்டம்!
Thursday March-19 2026

காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...

மார்ச் 27 ஆம் தேதி வெளியாகும் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)!
Thursday March-19 2026

’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...

Recent Gallery