Latest News :

சினிமாவை நிராகரிக்கும் சீரியல் நடிகை! - உண்மை காரணம் இதுவா?
Tuesday May-26 2020

விஜய் தொலைக்காட்சியின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ சீரியல் மூலம் பிரபலமான சரண்யா தொரடி சுந்தருக்கு சினிமா வாய்ப்புகள் பல வந்தாலும், அவர் அனைத்தையும் நிராகரித்துவிட்டு சீரியலே போதும், என்று கூறுகிறார். இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய சரணயா, சினிமா மூலம் கிடைக்கும் பணமும், புகழும் பயத்தை ஏற்படுத்துகிறது. அதனால் தான் சினிமாவை நிராகரிக்கிறேன், என்று தெரிவித்திருந்தார்.

 

சரண்யாவின் இந்த பதில் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதே சமயம், கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான ‘ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி’ என்ற படத்தில் நாயகியாக நடித்த சரண்யா, அதன் பிறகே சீரியலில் பிரபலமானார். சினிமாவில் அறிமுகமாகி பிறகு சீரியலுக்கு வந்தவர், தற்போது சினிமாவே வேண்டாம், என்று கூறுவதற்கு, அவர் சொல்லும் காரணம் மட்டும் உண்மையில்லையாம். வேறு ஒரு காரணமும் இருக்கிறதாம்.

 

அதாவது சீரியல் மூலம் பிரபலமாகியிருக்கும் சரண்யா, அதே சீரியல் உலகில் பல முன்னணி நடிகர்களுடன் நெருக்கமாக பழகுவதோடு, தொலைக்காட்சியில் உள்ள சில முக்கிய நபர்களுடன் நல்ல பழக்கத்தில் இருக்கிறாராம். அதாவது, அவர்களுடன் பப், பார்ட்டி என்று செல்லும் அளவுக்கு அவர்களுடன் அவருக்கு பழக்கம் இருக்கிறதாம். இனால், அவருக்கு டிவி-யில் வாய்ப்புகளுக்கும், வருமானத்திற்கும் பஞ்சமில்லை என்பதால், சினிமா வாய்ப்புகளை கண்டுக்கொள்வதில்லை, என்று அவரை தெரிந்தவர்கள் சிலர் கூறுகிறார்கள்.

 

ஆனால், தொலைக்காட்சியை விட சினிமா பெரிய மீடியம், அதில் அவர் வெற்றி பெற்றால் இதை விட பெரிய இடத்திற்கு போகலாம், இது தெரியாமல் அவர் டிவிக்காரங்களுடனே நேரத்தை வீணடிக்கிறார், என்ற பேச்சும் அடுபடுகிறது.

Related News

6620

காமெடி நடிகர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ‘கலப்பை மக்கள் இயக்கம்’!
Thursday November-20 2025

பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...

’மாண்புமிகு பறை’ தலைப்பே ஆழமாக சிந்திக்க வைக்கிறது - தொல்.திருமாவளவன் பாராட்டு
Thursday November-20 2025

அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...

ஆதரவற்றோர் இல்லத்தில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அருண் விஜய்!
Wednesday November-19 2025

தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...

Recent Gallery