கொரோனா ஊரடங்கால் சினிமா துறை மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதோடு, எப்போது பழைய நிலைக்கும் திரும்பும் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது. இதற்கிடையே, சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று, சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
கோரிக்கையை ஏற்ற முதல்வர் தொலைக்காட்சி தொடர்களின் படப்பிடிப்பை தொடங்க அனுமதி அளித்தார். அதே சமயம், நடிகர், நடிகைகள் உள்ளிட்டவர்களை சேர்ந்து 20 நபர்கள் மட்டுமே படப்பிடிப்பில் பங்கேற்க வேண்டும் உள்ளிட்ட சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டது.
ஆனால், இந்த கட்டுப்பாடுகளோடு படப்பிடிப்பு நடத்துவதி சாத்தியமில்லை என்பதால், அரசு கடந்த மே 21 ஆம் தேதி அனுமதி அளித்த பிறகும் சீரியல்களின் படப்பிடிப்பு தொடங்கவில்லை. காரணம், 20 நபர்களை மட்டுமே வைத்துக் கொண்டு பணியாற்றுவது நடக்காது ஒன்று என்பதால் தான்.
இந்த நிலையில், தொலைக்காட்சி தொடர்களின் படப்பிடிப்புக்கு 60 நபர்களை வைத்துக் கொள்ளலாம், என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். மேலும், சென்னையில் படப்பிடிப்பு நத்த வேண்டும் என்றால் மாநகராட்சி ஆணையரிடமும், பிற பகுதிகளில் நடத்த, அந்த பகுதி மாவட்ட ஆட்சியர்களிடமும், ஒரு சீரியலுக்கு ஒரு முறை மட்டும் அனுமதி வாங்கினால் போதும், என்றும் அறிவித்திருக்கிறார்.
முதல்வரின் இத்தகைய அறிவிப்பால் தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளர்கள் இன்றி சினிமா தொழிலாளர்களும் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள்.
பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான "தீமா தீமா" , “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...
காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...
’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...