Latest News :

அதிர்ச்சி செய்தி - கொரோனாவால் குஷ்பூ குடும்பத்தில் நிகழ்ந்த மரணம்!
Sunday May-31 2020

கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில், இன்று முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை ஊரடங்கை மத்திய அரசு நீட்டிப்பு செய்துள்ளது. அதே சமயம், கொரோனாவால் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

 

இந்த நிலையில், பிரபல நடிகையும், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளருமான குஷ்பூவின் குடும்பத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

மும்பையில் உள்ள குஷ்பூவின் நெருங்கிய உறவினர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்த நிலையில், நேற்று இரவு அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துவிட்டார்.

 

இந்த தகவலை நடிகை குஷ்பூ, தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். இதை அறிந்த சினிமா பிரபலங்கள் பலர் அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.


Related News

6644

காமெடி நடிகர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ‘கலப்பை மக்கள் இயக்கம்’!
Thursday November-20 2025

பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...

’மாண்புமிகு பறை’ தலைப்பே ஆழமாக சிந்திக்க வைக்கிறது - தொல்.திருமாவளவன் பாராட்டு
Thursday November-20 2025

அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...

ஆதரவற்றோர் இல்லத்தில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அருண் விஜய்!
Wednesday November-19 2025

தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...

Recent Gallery