Latest News :

இஸ்லாம் மதத்திற்கு மாறியது ஏன்? - யுவன் சங்கார் ராஜா பாதில்
Sunday May-31 2020

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் சங்கர் ராஜா, தனக்கென்ற தனி பாணியுடன் பயணிக்கிறார். இவரது இசைக்கும், குரலுக்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆன்மீகத்திலும், இந்து மதத்திலும் அதிக ஈடுபாடு கொண்ட இளையராஜாவின் இளையமகனான இவர், இஸ்லாம் மதத்திற்கு மாறியது அனைவரையும் அதிர்ச்சியாக்கியது. இருப்பினும், இது குறித்து யுவன் சங்கர் ராஜா மவுனம் காத்து வந்தார்.

 

இந்த நிலையில், தான் இஸ்லாம் மதத்திற்கு மாறியது ஏன்? என்று யுவன் சங்கர் ராஜா முதல் முறையாக விளக்கம் அளித்துள்ளார்.

 

2003 ஆம் ஆண்டு சுஜயா என்ற பெண்ணை திருமணம் செய்துக் கொண்ட யுவன், அவரை 2007 ஆம் ஆண்டு விவாகரத்து செய்த நிலையில், 2011 ஆம் ஆண்டு ஷில்பா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துக் கொண்டவர், அவரையும் விவாகரத்து செய்தார். இதையடுத்து, 2015 ஆம் ஆண்டு ஜப்ருன் நிஷா என்ற இஸ்லாம் பெண்ணை மூன்றாவதாக திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு பெண் குழந்தையும் பிறந்தது.

 

சமூக வலைதளத்தில் யுவனின் மனைவி ஜப்ருன் நிஷாவிடம் ரசிகர் ஒருவர், யுவனை இஸ்லாம் மதத்திற்கு மாற சொல்லி நீங்கள் நிர்பந்தித்தீர்களா? என்று கேட்க, அதற்கு அவர், என்னை திருமணம் செய்வதற்கு முன்பாகவே யுவன் இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டார். மேலும், இதுபோன்ற கேள்விகளுக்கு அவரே நேரடியாக விரைவில் பதில் அளிப்பார், என்றும் கூறியிருந்தார்.

 

அதன்படி, தான் இஸ்லாம் மதத்திற்கு மாறியது ஏன்? என்பதற்கு சமூக வலைதளம் மூலம் விளக்கம் அளித்த யுவன், இஸ்லாம் மதத்தில் அமைதி போதிக்கப்படுகிறது. அது தான் என்னை ஈர்த்தது. மேலும், நாம் இறந்த பிறகு நமது ஆத்மா எங்கே போகிறது?, ஏழை, பணக்காரர்கள் என்ற பாகுபாடு இருப்பது ஏன்? போன்ற கேள்விகளுக்கு குரானில் நேரடியாக பதில் கிடைத்ததாக நான் உணர்ந்தேன், அதனால் தான் இஸ்லாம் மதத்திற்கு மாறினேன்.” என்று தெரிவித்துள்ளார்.

Related News

6645

காமெடி நடிகர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ‘கலப்பை மக்கள் இயக்கம்’!
Thursday November-20 2025

பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...

’மாண்புமிகு பறை’ தலைப்பே ஆழமாக சிந்திக்க வைக்கிறது - தொல்.திருமாவளவன் பாராட்டு
Thursday November-20 2025

அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...

ஆதரவற்றோர் இல்லத்தில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அருண் விஜய்!
Wednesday November-19 2025

தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...

Recent Gallery