கொரோனா ஊரடங்கினால் பலர் திருமணங்களை ஒத்தி வைக்கிறார்கள். பலர், எளிமையான முறையில் தங்களது வீடுகளில் நடத்திக் கொள்கிறார்கள். அந்த வகையில், ஏராளமான தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கும் நடிகை ஒருவரது திருமண நிச்சயதார்த்தம் சத்தமில்லாமல் நடைபெற்று இருக்கிறது.
’அமரகாவியம்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் மியா ஜார்ஜ். இப்படத்தை தொடர்ந்து ’இன்று நேற்று நாளை’, ‘வெற்றிவேல்’, ‘ஒருநாள் கூத்து’, ‘எமன்’ உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்திருக்கும் இவருக்கு தற்போது தமிழில் எந்த படமும் இல்லை. அதே சமயம், மலையாள சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில், மியா ஜார்ஜுக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. கொரோனா ஊரடங்கினால் மிக எளிமையான முறையில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது. அஸ்வின் பிலிப் என்பவரை மியா ஜார்ஜ் திருமணம் செய்துக் கொள்ள போகிறார். இவர்களது திருமணம் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது.
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...