கொரோனா ஊரடங்கினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தியாவாசிய தேவைகளை கூட சரியாக பூர்த்தி செய்துக் கொள்ள முடியாத நிலைக்கு பலர் தள்ளப்பட்டிருக்கும் நிலையில், அரசு மக்களுக்கு பெரிதாக எதையும் செய்யவில்லை. மூன்று மாத இலவச ரேஷன் பொருட்கள் மற்றும் ரூ.1000 நிவாரண தொகை வழங்கியதோடு நிறுத்திக் கொண்டது.
அதே சமயம், மின்சாரக் கட்டணம், தண்ணீர் வரி உள்ளிட்ட கட்டணங்களை மக்களிடம் இருந்து வசூலிப்பதில் மும்முரம் காட்டி வருகிறது. தொகை கட்டுவதற்கான கால அவகாசத்தை சில வாரங்கள் நீட்டித்ததை தவிர, கட்டணத்தில் குறைப்பு, ரத்து போன்றவைகளை அரசு செய்யவில்லை.
இந்த நிலையில், தமிழ்நாடு மின்சாரத்துறை மக்களிடம் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக நடிகர் பிரசன்னா பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். அதாவது, மின்சார கட்டணம் முன்பை விட தற்போது பல மடங்கு அதிகமாக வசூலிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
இது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், ”தமிழ்நாடு மின்சார வாரியம் நல்லா கொள்ளை அடிக்குறாங்க, இதை உங்களில் எத்தனை பேர் உணர்கிறீர்கள்?” என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் பிரசன்னாவின் இந்த பதிவுக்கு ரசிகர்கள் பலர் பதில் அளித்து வருகிறார்கள். அதில் பலர், மின்சார வாரியத்தை விமர்சித்தும் வருகிறார்கள்.
பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான "தீமா தீமா" , “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...
காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...
’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...