Latest News :

கொள்ளையடிக்கும் மின்சார வாரியம்! - நடிகர் பிரசன்னா காட்டம்
Wednesday June-03 2020

கொரோனா ஊரடங்கினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தியாவாசிய தேவைகளை கூட சரியாக பூர்த்தி செய்துக் கொள்ள முடியாத நிலைக்கு பலர் தள்ளப்பட்டிருக்கும் நிலையில், அரசு மக்களுக்கு பெரிதாக எதையும் செய்யவில்லை. மூன்று மாத இலவச ரேஷன் பொருட்கள் மற்றும் ரூ.1000 நிவாரண தொகை வழங்கியதோடு நிறுத்திக் கொண்டது.

 

அதே சமயம், மின்சாரக் கட்டணம், தண்ணீர் வரி உள்ளிட்ட கட்டணங்களை மக்களிடம் இருந்து வசூலிப்பதில் மும்முரம் காட்டி வருகிறது. தொகை கட்டுவதற்கான கால அவகாசத்தை சில வாரங்கள் நீட்டித்ததை தவிர, கட்டணத்தில் குறைப்பு, ரத்து போன்றவைகளை அரசு செய்யவில்லை.

 

இந்த நிலையில், தமிழ்நாடு மின்சாரத்துறை மக்களிடம் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக நடிகர் பிரசன்னா பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். அதாவது, மின்சார கட்டணம் முன்பை விட தற்போது பல மடங்கு அதிகமாக வசூலிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

 

இது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், ”தமிழ்நாடு மின்சார வாரியம் நல்லா கொள்ளை அடிக்குறாங்க, இதை உங்களில் எத்தனை பேர் உணர்கிறீர்கள்?” என்று தெரிவித்துள்ளார்.

 

நடிகர் பிரசன்னாவின் இந்த பதிவுக்கு ரசிகர்கள் பலர் பதில் அளித்து வருகிறார்கள். அதில் பலர், மின்சார வாரியத்தை விமர்சித்தும் வருகிறார்கள்.

Related News

6662

என் மீது நான் வைத்த குருட்டு நம்பிக்கை ரசிகர்களின் ஆதரவால் ஈடேறியது! - பிரதீப் ரங்கநாதன் நெகிழ்ச்சி
Sunday June-29 2025

ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ்...

அனல் அரசு மூலமாக என் மகன் சினிமாவில் அறிமுகமாவதை பாக்கியமாக நினைக்கிறேன் - நடிகர் விஜய் சேதுபதி நெகிழ்ச்சி
Sunday June-29 2025

விஜய் சேதுபதி அவர்களின் மகன் சூர்யா விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் பீனிக்ஸ் படத்தை இயக்குனர் அனல் அரசு இயக்கியுள்ளார்...

ருத்ராவுக்கு நான் செய்ய வேண்டிய கடமை - நடிகர் விஷ்ணு விஷால் உருக்கம்
Sunday June-29 2025

ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் பெருமையுடன் தயாரித்து வழங்கும் ரொமாண்டிக் எண்டர்டெய்னர் திரைப்படம் 'ஓஹோ எந்தன் பேபி' இன் அசோசியேஷன் வித் குட் ஷோ...

Recent Gallery