இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் நோயாளிகளின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே போகிறது. மேலும், சினிமா நட்சத்திரங்களும், அவர்களது குடும்பத்தாரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், பிரபுதேவா ஹீரோவாக நடித்த ’ஏபிசிடி’ என்ற இந்தி படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த மோஹனா குமாரி சிங்கும் கொரோனாவால் பாதிக்கபட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.
திரைப்படங்கள் மட்டும் இன்றி பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வரும் மோஹனா குமாரி சிங், டேராடூனில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவருக்கு சமீபத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக மோஹனா குமாரி சிங்கின் மாமியாருக்கு காய்ச்சல் இருந்துள்ளது. அதை தொடர்ந்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, குடும்பத்தார் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அப்போது, நடிகை மோஹனா குமாரி உள்ளிட்ட அவரது குடும்பத்தார் அனைவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, நடிகை மோஹனா குமாரி சிங்கின் குடும்பத்தார் 7 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர்களது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான "தீமா தீமா" , “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...
காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...
’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...