வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகும் ‘மாநாடு’ பல்வேறு பிரச்சினைகளுக்கு பிறகு படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், கொரோனா பாதிப்பால் தற்போது படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, திரைப்பட படப்பிடிப்புகளுக்கு அரசு அனுமதி அளித்தாலும், ‘மாநாடு’ படப்பிடிப்பை உடனே தொடங்க முடியாதாம்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட துணை நடிகர்களை வைத்து படமாக்க வேண்டிய காட்சிகள் இருப்பதால், தற்போதைய சூழலில் படப்பிடிப்பை உடனே தொடங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் ‘மாநாடு’ குழு, அதே சமயம் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா ஆகியோரது தேதிகளை வீணடிக்க கூடாது, என்றும் முடிவு செய்திருக்கிறதாம்.
இதற்காக, 30 நாட்களில் ஒரே இடத்தில் படமாக்க கூடிய கதை ஒன்றை படமாக்கி விடலாம், என்ற முடிவுக்கு இயக்குநர் வெங்கட் பிரபு வந்திருக்கிறாராம். இதற்காக பேய்க்கதை ஒன்றை எழுதி முடித்திருக்கும் வெங்கட் பிரபு, தற்போது அக்கதையை படமாக்க சிம்புவின் அனுமதிக்காக காத்துக் கொண்டிருக்கிறாராம்.
சிம்பு, ஓகே சொல்லிவிட்டால், ஜூலை மாதத்திலேயே பேய் படத்தின் படப்பிடிப்பை வெங்கட் பிரபு தொடங்கி விடுவாராம்.
அப்படி இந்த புதிய படம் தொடங்கப்பட்டால், ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் தான் தொடங்கும்.
பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான "தீமா தீமா" , “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...
காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...
’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...