கொரோனா ஊரங்கினால் சினிமா தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தொலைக்காட்சி தொடர்களுக்கான படப்பிடிப்புக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. நடிகர், நடிகைகள் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் என மொத்தம் 60 பேர்களை வைத்து படப்பிடிப்பு நடத்த வேண்டும் உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை அரசு விதித்தது.
இதற்கிடையே திரைப்பட படப்பிடிப்புக்கும் அரசு அனுமதி அளிக்க வேண்டும், என்று தயாரிப்பாளர்கள் முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆனால், இது குறித்து தமிழக அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.
இந்த நிலையில், மகாராஷ்ட்டிரா மாநிலத்தில் திரைப்படங்களின் படப்பிடிப்புக்கு அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. அதே சமயம், 65 வயதுக்கு மேற்பட்ட நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை படப்பிடிப்பில் அனுமதிக்க கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா அதிகரித்து வருகிறது. அதில் முதல் இடத்தில் இருப்பது மகாராஷ்ட்டிரா மாநிலம் தான். அங்கு இதுவரை சுமார் 70 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது பல்வேறு மாநிலங்களில் பல தளர்வுகள் பிறப்பிக்கப்பட்டு வரும் நிலையில், மகாராஷ்ட்டிரா மாநில அரசு சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. அதே சமயம், பல கட்டுப்பாடுகளை விதித்துள்ள அரசு 65 வயதுக்கு மேற்பட்டவர்களை படப்பிடிப்பில் அனுமதிக்க கூடாது, படப்பிடிப்பு தளத்தில் மருத்துவ குழு இருக்க வேண்டும் உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அனைத்து கட்டுப்பாடுகளையும் ஏற்றுக்கொண்ட சினிமா துறையினர் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடை விதித்திருக்கும் கட்டுப்பாட்டை மட்டும் ஏற்றுக்கொள்ளவில்லை. காரணம் அமிதாப் பச்சன் உள்ளிட்ட பாலிவுட்டில் பல முன்னணி நடிகர்கள் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பது தான்.
ரஜினி, கமல், சிரஞ்சீவி என இந்திய சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் 65 வயதை தாண்டியுள்ளதால், மகாராஷ்ட்டிரா அரசின் இத்தகைய கட்டுப்பாட்டால் பாலிவுட் நடிகர்கள் மட்டும் இன்றி பிற மாநில நடிகர்களும் கலக்கம் அடைந்திருக்கிறார்கள்.
பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான "தீமா தீமா" , “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...
காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...
’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...