விஷால் நடிப்பில் ‘துப்பறிவாளன் 2’ மற்றும் ‘சக்ரா’ ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இந்த இரண்டு படங்களும் முடியும் தருவாயில் உள்ள நிலையில், கொரோனாவால் தற்போது படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரிக்கும் ‘சக்ரா’ படத்தை அறிமுக இயக்குநர் எம்.எஸ்.ஆனந்தன் இயக்குகிறார். இதில் ஷ்ரத்த ஸ்ரீநாத், ரெஜினா கசண்ட்ரா ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்க, ரோபோ சங்கர், கே.ஆர்.விஜயா, ஸ்ருஷ்டி ராங்கே, மனோபாலா, விஜய்பாபு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
ஆன்லைன் வர்த்தக மோசடிகளை மையமாக வைத்து உருவாகும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சமீர் முகமது படத்தொகுப்பு செய்ய, அனல் அரசு சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிவடைந்த நிலையில், ஒரே ஒரு வாரத்திற்கான படப்பிடிப்பு மட்டும் எஞ்சியிருக்கும் போது தான் கொரோனா பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. இதனால், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது 7 நாட்கள் கிடைத்தால் ‘சக்ரா’ படப்பிடிப்பு முடிந்துவிடும் என்பதால், விஷால் அந்த 7 நாட்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.
அதே சமயம், ‘சக்ரா’ படத்தின் டீசரை விரைவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...