நடிகர் சிம்புவுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாகவும், அவரது உறவுக்கார பெண்ணை அவர் மணப்பதாகவும் தகவல் வெளியானது. இது குறித்து அவரது நெருங்கிய நண்பர்களான நடிகர்கள் சிலர் பேட்டிகளில் தெரிவித்தனர். இதையடுத்து இந்த தகவல் செய்தியாக வேகமாக பரவியது.
இந்த நிலையில், சிம்பு திருமணம் குறித்து வெளியான தகவல்களை மறுத்திருக்கும் அவரது தந்தையும், பிரபல நடிகரும் இயக்குநருமான டி.ராஜேந்திர, சிம்பு திருமணம் குறித்து வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை, என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து டி.ராஜேந்தர் - உஷா தம்பதியினர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “எங்கள் மூத்த மகன் சிலம்பரசன் திருமணம் பற்றி பத்திரிக்கைகளிலும் இணையதளங்களிலும் தவறான செய்திகள் வெளியாகி வருகின்றன. இப்படி வரும் செய்திகள் யாவும் உண்மை தன்மை அற்றவை.
எங்கள் மகன் சிலம்பரசனின் ஜாதகத்திற்கு பொருத்தமான பெண்னை பார்த்துக் கொண்டிருக்கிறோம். பெண் அமைந்ததும் சிலம்பரசன் திருமணம் பற்றிய நற்செய்தியை முதலில் பத்திரிக்கை வாயிலாக உங்கள் அனைவருக்கும் சந்தோஷத்துடன் அதிகாரப்பூர்வமாக நாங்களே அறிவிப்போம். அதுவரை வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.” என்று தெரிவித்துள்ளனர்.
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...