கன்னட சினிமாவின் முன்னணி நடிகரும், ஆக்ஷன் கிங் அர்ஜூனின் அக்கா மகனுமான சிரஞ்சீவி சார்ஜாவின் மரணம் திரையுலகினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதோடு, 39 வயதாகும் சிரஞ்சீவி சார்ஜாவின் இந்த திடீர் மரணம் பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
கொரோனா வேகமாக பரவும் தற்போதைய சூழலில் இளம் வயது நடிகர் ஒருவர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, அவரது மரணத்திற்கான காரணம் குறித்து உடனடியாக மருத்துவமனை சார்பில் எவ்வித அறிவிப்பும் வெளியிடாதது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், நடிகர் சிரஞ்சீவி சார்ஜா நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று (ஜூன் 7) அவருக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட, அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்கள்.
மேலும், 2 நாட்களுக்கு முன்பே சிரஞ்சீவி சார்ஜாவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அப்போது அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அப்போதே அவர் முழுவதுமான பரிசோதனை மேற்கொண்டிருந்தால் மரணத்தை தவிர்த்திருக்கலாம், என்று மருத்துவர்கள் வட்டாரம் தெரிவித்துள்ளது.
2 நாட்களுக்கு முன்பு நெஞ்சு வலி ஏற்பட்டும் அதை சரியாக கவனிக்காத சிரஞ்சீவி சார்ஜாவுக்கு மீண்டும் நேற்று திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட, அவரை உடனடியாக மருத்துவனைக்கு அழைத்து சென்றும், சிகிச்சை அளிப்பதற்கு முன்பாகவே அவர் இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
சிரஞ்சீவி சார்ஜாவின் உடல் இன்று தும்குர் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட உள்ளது.
ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ்...
விஜய் சேதுபதி அவர்களின் மகன் சூர்யா விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் பீனிக்ஸ் படத்தை இயக்குனர் அனல் அரசு இயக்கியுள்ளார்...
ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் பெருமையுடன் தயாரித்து வழங்கும் ரொமாண்டிக் எண்டர்டெய்னர் திரைப்படம் 'ஓஹோ எந்தன் பேபி' இன் அசோசியேஷன் வித் குட் ஷோ...