சென்னை கொடுங்கையூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இரண்டு நாட்களாக துர்நாற்றம் வீச, அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீஸார் அந்த வீட்டு கதவை உடைத்து பார்த்தபோது, அங்கு ஆண் மற்றும் பெண் என இரண்டு சடலங்கள் அழுகிய நிலையில் இருந்தனர். இருவருக்கும் சுமார் 45 முதல் 50 வயது இருக்கும் என்று கூறப்படுகிறது.
இரண்டு உடல்களும் அரசு மருத்துவவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், இறந்தவர்கள் ஸ்ரீதர் மற்றும் அவரது தங்கை ஜெய கல்யாணி என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், இவர்கள் இருவரும் சீரியல்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வருபவர்கள். சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாகவும் இருக்கிறார்கள்.
கொரோனா ஊரடங்கினால் சுமார் இரண்டரை மாதங்களாக சினிமா மற்றும் தொலைக்காட்சி படப்பிடிப்புகள் இல்லாததால் வறுமைக்கு தள்ளப்பட்ட ஸ்ரீதர் மற்றும் ஜெய கல்யாணி, மன அழுத்தத்தால் தற்கொலை செய்துக் கொண்டதாக போலீஸார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஏற்கனவே, இந்தி சீரியல் நடிகர், நடிகைகள் சிலர் வறுமையால் தற்கொலை செய்துக் கொண்ட நிலையில், தற்போது தமிழ் சீரியல் நடிகர், நடிகையின் தற்கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான "தீமா தீமா" , “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...
காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...
’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...