Latest News :

ஒரே வீட்டில் சீரியல் நடிகர், நடிகை தற்கொலை - சென்னையில் பரபரப்பு
Monday June-08 2020

சென்னை கொடுங்கையூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இரண்டு நாட்களாக துர்நாற்றம் வீச, அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீஸார் அந்த வீட்டு கதவை உடைத்து பார்த்தபோது, அங்கு ஆண் மற்றும் பெண் என இரண்டு சடலங்கள் அழுகிய நிலையில் இருந்தனர். இருவருக்கும் சுமார் 45 முதல் 50 வயது இருக்கும் என்று கூறப்படுகிறது.

 

இரண்டு உடல்களும் அரசு மருத்துவவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், இறந்தவர்கள் ஸ்ரீதர் மற்றும் அவரது தங்கை ஜெய கல்யாணி என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், இவர்கள் இருவரும் சீரியல்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வருபவர்கள். சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாகவும் இருக்கிறார்கள்.

 

கொரோனா ஊரடங்கினால் சுமார் இரண்டரை மாதங்களாக சினிமா மற்றும் தொலைக்காட்சி படப்பிடிப்புகள் இல்லாததால் வறுமைக்கு தள்ளப்பட்ட ஸ்ரீதர் மற்றும் ஜெய கல்யாணி, மன அழுத்தத்தால் தற்கொலை செய்துக் கொண்டதாக போலீஸார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 

ஏற்கனவே, இந்தி சீரியல் நடிகர், நடிகைகள் சிலர் வறுமையால் தற்கொலை செய்துக் கொண்ட நிலையில், தற்போது தமிழ் சீரியல் நடிகர், நடிகையின் தற்கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related News

6692

காமெடி நடிகர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ‘கலப்பை மக்கள் இயக்கம்’!
Thursday November-20 2025

பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...

’மாண்புமிகு பறை’ தலைப்பே ஆழமாக சிந்திக்க வைக்கிறது - தொல்.திருமாவளவன் பாராட்டு
Thursday November-20 2025

அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...

ஆதரவற்றோர் இல்லத்தில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அருண் விஜய்!
Wednesday November-19 2025

தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...

Recent Gallery