தமிழ் சினிமாவை சேர்ந்த பல பிரபலங்கள் இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறி வரும் நிலையில், பிரபல நடிகை ஒருவர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதோடு, மத போதகராகவும் பணியாற்றி வருகிறார்.
1991 ஆம் ஆண்டு வெளியான ‘ஈரமான ரோஜாவே’ படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக் அறிமுகமானவர் மோகினி. இவரது இயற்பெயர் மகாலக்ஷ்மி. தஞ்சை மாவட்டத்தில் இந்து குடும்பத்தில் பிறந்த இவர், சினிமாவுக்காக தனது பெயரை மோகினி என்று மாற்றிக் கொண்டு நடித்து வந்தார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் நடித்து வந்த மோகினி, 1999 ஆம் ஆண்டு பரத் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துக் கொண்டு அமெரிக்காவில் குடியேறினார். பிறகு இவர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய நிலையில், நடிகை மோகினி தற்போது கிறிஸ்தவ மத போதகராக மாறியுள்ளார்.
மோகினி கிறிஸ்டினா என்ற பெயரில் கிறிஸ்தவ மத போதகராக வலம் வரும் மோகினிக்கு, அனிருத் மைக்கேல் பரத் மற்றும் அத்வைத் கேப்ரியல் பரத் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான "தீமா தீமா" , “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...
காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...
’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...