நடிகை குஷ்பு தனது பேச்சால் பல முறை சர்ச்சைகளில் சிக்குவதோடு, நீதிமன்ற வழக்குகளையும் எதிர்க்கொண்டிருக்கிறார். அந்த வகையில், மீண்டும் ஆணவமாக பேசி பெரும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.
நடிகர், நடிகைகள் உள்ளிட்ட 60 நபர்களுடன் தொலைக்காட்சி தொடர்களின் படப்பிடிப்புகளை நடத்தலாம், என்று அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து, சில சீரியல்களின் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்க உள்ளது.
இதற்கிடையே, சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயலாளராக இருக்கும் நடிகை குஷ்பு, படப்பிடிப்புக்கு தயாராகும் சில சீரியல் தயாரிப்பாளர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் வாய்ஸ் மெசஜ் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், பத்திரிகையாளர்களை ஒருமையில் ஆணவமாக பேசியிருக்கிறார்.
தற்போது இந்த ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பத்திரிகையாளர்கள் நடிகை குஷ்புவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ் பெண்களுக்கு கற்பு இல்லை, என்ற ரீதியில் பேசி சர்ச்சையில் சிக்கிய குஷ்பு, இந்து கடவுள் சிலை அருகே செருப்பு காலுடன் உட்கார்ந்திருந்து சர்ச்சையில் சிக்கினார். இப்படி பல முறை சர்ச்சையில் சிக்கிய அவர், அதனால் தன் மீது போடப்பட்ட வழக்குகளை எதிர்கொள்வதற்காக திமுக-வில் இணைந்தார். பிறகு அங்கையும் பல சர்ச்சைகளில் சிக்கியவர் காங்கிரஸ் கட்சிக்கு தாவினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான "தீமா தீமா" , “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...
காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...
’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...