பாலிவுட் சினிமாவின் முன்னணி ஹீரோயினாக வலம் வந்து பிறகு சில ஹாலிவுட் படங்களில் நடித்த பிரியங்கா சோப்ரா, அமெரிக்க பாடகர் நிக் ஜோன்ஸை திருமணம் செய்துக் கொண்டு அந்நாட்டில் செட்டிலாகிவிட்டார்.
ஆடம்பர தம்பதி என்று சொல்லக்கூடிய அளவுக்கு, பிரியங்கா சோப்ரா - நிக் ஜோன்ஸ் தம்பதி, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், ரூ.144 கோடியில் வீடு ஒன்றை வாங்கினார்கள். இதையடுத்து, ரூ.3 கோடியில் சொகுசு கார் ஒன்றையும் வாங்கினார்கள்.
இந்த நிலையில், பிரியங்கா சோப்ராவின் கணவர் நிஜ் ஜோன்ஸ் புதிய கைக்கடிகாரம் ஒன்றை வாங்கியுள்ளாராம். ஏராளமான வைர கற்கள் பதிக்கப்பட்டுள்ள இந்த கைக்கடிகாரத்தின் விலை ரூ.7.5 கோடியாம். மேலும், உலகிலேயே அதிக விலை கொண்ட கைக்கடிகாரம் இது தானாம்.

சமீபத்தில், நிக் ஜோன்ஸும், பிரியங்கா சோப்ராவும், விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டார்கள். அப்போது இருவரும் ஜோடியாக போஸ் கொடுக்க, அங்கிருந்தவர்களின் பார்வை முழுவதும், நிக்கின் விலையுர்ந்த கைக்கடிகாரம் மீது தான் இருந்ததாம்.
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...