சமுத்திரக்கனி இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் 2009 ஆம் ஆண்டு வெளியான படம் ‘நாடோடிகள்’. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற இப்படத்தில் ஹீரோயினாக அனன்யா நடித்திருந்தார். சசிகுமாரின் தங்கையாக அபிநயா நடித்திருந்தார். இவருக்கு வாய் பேச வராது, காதும் கேளாது. இருப்பினும் அந்த குறையே தெரியாதவாறு அவர் நடித்த விதம் அனைவராலும் பாராடு பெற்றது.
இந்த நிலையில், ‘நாடோடிகள்’ படத்தில் சிறிய வேடம் ஒன்றில் நடித்த துணை நடிகை ஒருவர் நடிகர் ஒருவர் தன்னை திருமணம் செய்துக் கொள்வதாக கூறி பல முறை தன்னுடன் உல்லாசமாக இருந்துவிட்டு தற்போது திருமணம் செய்ய மறுப்பதாக, போலீசில் புகார் அளித்திருக்கிறார்.
சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் வசிப்பவர் தியாகராஜன். ‘தரிசு நிலம்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருக்கும் தியாகராஜனும், ‘நாடோடிகள்’ துணை நடிகையும் காதலித்ததோடு, ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்திருக்கிறார்கள். அப்போது நடிகை பல முறை கர்ப்பமடைய, தியாகராஜனின் வற்புறுத்தலால் கருக்கலைப்பிலும் ஈடுபட்டுள்ளார்.

தற்போது தியாகராஜன் தன்னை திருமணம் செய்துக் கொள்ள மறுப்பதால் காவல் துறையில் நடிகை புகார் அளித்திருக்கிறார். மேலும், தியாகராஜனிடம் நியாயம் கேட்ட நடிகைக்கு அவர் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.
இதையடுத்து, தியாகராஜன் மீது மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளார்கள்.

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான "தீமா தீமா" , “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...
காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...
’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...