அதிகம் மக்கள் பார்க்க கூடிய தொலைக்காட்சி தொடர்களில் ‘செம்பருத்தி’ தொடர் முக்கியமானதாகும். இந்த தொடர் தான் சீரியல்களில் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது. மேலும், இந்த தொடர் மூலம் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் டி.ஆர்.பி-யும் உயர்ந்தது.
இதற்கிடையே, கொரோனா பாதிப்பால் சீரியல் படப்பிடிப்புகள் நடக்காததால், தொலைக்காட்சி தொடர்களின் பழைய எப்பிசோட்களை ஒளிபரப்பி வந்தார்கள். அந்த வகையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியும் செம்பருத்தி சீரியலின் பழைய எப்பிசோட்களை ஒளிபரப்பியதால் அதன் டி.ஆர்.பி ரேட்டிங் குறைந்தது.
தற்போது சீரியல் படப்பிடிப்புகள் நடத்த அரசு அனுமதி வழங்கியதை தொடர்ந்து, தனது ‘செம்பருத்தி’ சீரியலின் படப்பிடிப்பை தொடங்க இருப்பதாக ஜீ தமிழ் தொலைக்காட்சி அறிவித்திருந்த நிலையில், ‘செம்பருத்தி’ சீரியல் நாயகியான பார்வதி என்று அழைக்கப்படும் நடிகை ஷபானா, வெளியிட்டிருக்கும் தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்.
ஆம், ‘செம்பருத்தி’ சீரியல் படப்பிடிப்பு தொடங்கி விட்டதை, அந்த சீரியலின் நாயகியான நடிகை ஷபானா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டதோடு, புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளவர், “படப்பிடிப்பு தொடங்கிவிட்டது, கூடிய விரைவில் உங்களை சந்திக்க வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான "தீமா தீமா" , “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...
காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...
’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...