Latest News :

பிரபல இயக்குநர் படத்தை நிராகரித்த நயன்தாரா!
Sunday June-14 2020

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாராவின் நடிப்பில் ‘மூக்குத்தி அம்மன்’ ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இப்படம் ஒடிடி-யில் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில், படத்தின் இயக்குநர் ஆர்ஜே பாலாஜி, அதை மறுத்ததோடு, படத்தை நிச்சயம் திரையரங்கில் தான் ரிலீஸ் செய்வோம், என்றும் தெரிவித்துள்ளார்.

 

மேலும், காதலர் விக்னேஷ் சிவன் தயாரிக்கும் ‘நெற்றிக்கண்’ படத்திலும், அவர் இயக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ரஜினியின் ‘அண்ணாத்தே’ என்று கை நிறைய பட வாய்ப்புகளுடன் இருக்கும் நயன்தாராவுக்கு முன்னணி ஹீரோக்களின் படங்கள் மட்டும் இன்றி, கதாநாயகியை மையப்படுத்திய கதைகளும் அவரை தேடி வருகின்றது.

 

இந்த நிலையில், பல வெற்றிப் படங்களை கொடுத்த பிரபல இயக்குநர் ஒருவர் கதாநாயகியை மையப்படுத்திய கதை ஒன்றில் நயன்தாராவை நடிக்க வைக்க முடிவு செய்து அவரை அனுகியபோது, நயன்தாரா “நோ” சொல்லிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

அந்த இயக்குநர் சமீபத்தில் ‘சைக்கோ’ படத்தைக் கொடுத்த மிஷ்கின் தான். விஷாலுடன் ஏற்பட்ட மோதலால் ‘துப்பறிவாளன் 2’ படத்தில் இருந்து விலகிய இயக்குநர் மிஷ்கின் சிம்புவை வைத்து ஒரு படம் இயக்க இருக்கிறார். அதற்குள் அருண் விஜயை வைத்து ஒரு படத்தை முடித்துவிட முடிவு செய்திருப்பவர், அதற்காக ‘அஞ்சாதே’ படத்தின் இரண்டாம் பாகத்தை கையில் எடுத்துள்ளார்.

 

Director Mysskin

 

மேலும், கதாநாயகியை மையப்படுத்திய கதை ஒன்றையும் எழுதி முடித்திருப்பவர், அதில் நயன்தாராவை நடிக்க வைக்க முடிவு செய்து, அவரிடம் கதை சொல்லியிருக்கிறார். கதையை கேட்ட நயன்தாரா, இந்த கதை தனக்கு செட்டாகாது, என்று கூறி மறுத்துவிட்டாராம்.

 

கடுப்பான இயக்குநர் மிஷ்கின், தனது ‘சைக்கோ’ படத்தில் நடித்த அதிதி ராவ், நித்யா மேனன் ஆகிய ஒருவரில் ஒருவரை வைத்து இந்த கதையை வெற்றிப்படாக்கி காட்டுகிறேன், என்று சவால் விட்டிருக்கிறாராம்.

Related News

6724

காமெடி நடிகர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ‘கலப்பை மக்கள் இயக்கம்’!
Thursday November-20 2025

பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...

’மாண்புமிகு பறை’ தலைப்பே ஆழமாக சிந்திக்க வைக்கிறது - தொல்.திருமாவளவன் பாராட்டு
Thursday November-20 2025

அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...

ஆதரவற்றோர் இல்லத்தில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அருண் விஜய்!
Wednesday November-19 2025

தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...

Recent Gallery