கிரிக்கெட் வீரர் டோனியின் வாழ்க்கை திரைப்படமான் ’எம்.எஸ்.டோனி - தி அண்டோல்ட் ஸ்டோரி’ (M.S. Dhoni: The Untold Story) திரைப்படத்தில் டோனியின் வேடத்தில் நடித்த பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துக் கொண்டார்.
’கை பே சே’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக இந்தி சினிமாவில் அறிமுகமான சுஷாந்த் சிங், தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்ததோடு, டோனியின் வாழ்க்கை திரைப்படத்தில் டோனியாக நடித்து அசத்தினார். மேலும், இவரது நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான மூன்று படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன.
இந்த நிலையில், மன அழுத்தம் காரணமாக நடிகர் சுஷாந்த் சிங், இன்று தற்கொலை செய்துக் கொண்டது இந்திய சினிமாவையே அதிர்ச்சியடைய செய்துள்ளது.
34 வயதாகும் சுஷாந்த் சிங், இந்த இளம் வயதில் எதற்கு தற்கொலை செய்துக் கொண்டார், அவருக்கு மன அழுத்தம் ஏற்படும் அளவுக்கு என்ன பிரச்சினை, என்பது குறித்து இதுவரை தெரியவில்லை.
ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ்...
விஜய் சேதுபதி அவர்களின் மகன் சூர்யா விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் பீனிக்ஸ் படத்தை இயக்குனர் அனல் அரசு இயக்கியுள்ளார்...
ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் பெருமையுடன் தயாரித்து வழங்கும் ரொமாண்டிக் எண்டர்டெய்னர் திரைப்படம் 'ஓஹோ எந்தன் பேபி' இன் அசோசியேஷன் வித் குட் ஷோ...