கிரிக்கெட் வீரர் டோனியின் வாழ்க்கை திரைப்படமான் ’எம்.எஸ்.டோனி - தி அண்டோல்ட் ஸ்டோரி’ (M.S. Dhoni: The Untold Story) திரைப்படத்தில் டோனியின் வேடத்தில் நடித்த பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துக் கொண்டார்.
’கை பே சே’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக இந்தி சினிமாவில் அறிமுகமான சுஷாந்த் சிங், தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்ததோடு, டோனியின் வாழ்க்கை திரைப்படத்தில் டோனியாக நடித்து அசத்தினார். மேலும், இவரது நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான மூன்று படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன.

இந்த நிலையில், மன அழுத்தம் காரணமாக நடிகர் சுஷாந்த் சிங், இன்று தற்கொலை செய்துக் கொண்டது இந்திய சினிமாவையே அதிர்ச்சியடைய செய்துள்ளது.
34 வயதாகும் சுஷாந்த் சிங், இந்த இளம் வயதில் எதற்கு தற்கொலை செய்துக் கொண்டார், அவருக்கு மன அழுத்தம் ஏற்படும் அளவுக்கு என்ன பிரச்சினை, என்பது குறித்து இதுவரை தெரியவில்லை.
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...