கிரிக்கெட் வீரர் டோனியின் வாழ்க்கை திரைப்படத்தில் டோனியாக நடித்து புகழ் பெற்ற நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புத், நேற்று தனது வீட்டில் தற்கொலை செய்துக் கொண்டார். இளம் வயது நடிகரின் இந்த முடிவு பாலிவுட் சினிமாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சுஷாந்தின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அவர் தற்கொலை செய்துக்கொண்டதை மருத்துவர்கள் உறுதிப்படுடுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், சுஷாந்த் தற்கொலை செய்யவில்லை, அவனை யாரோ கொலை செய்துவிட்டார்கள், என்று அவரது உறவினர் ஒருவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுஷாந்தின் தாய் வழியில் மாமா முறை உள்ள ஒருவர், சுஷாந்த் மரணம் குறித்து மீடியாக்களில் பேசி வருகிறார். அவர் கூறுகையில், “சுஷாந்த் மிக தைரியமானவன். அவன் ஒரு போதும் தற்கொலை செய்திருக்க மாட்டான், அவனை யாரோ கொலை தான் செய்துள்ளனர்.” என்று கடுமையாக பேசியிருக்கிறார்.
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...