கடந்த சில மாதங்களாக திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் உயிரிழந்து வருவது திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்துக் கொண்ட அதிர்ச்சியில் இருந்து திரையுலகின் மீளாத நிலையில், சினிமா உலகில் மற்றொரு மரணம் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மலையாள சினிமாவின் பிரபல நடிகையும் மறைந்த இசையமைப்பாளர் எம்.ஜி.ராதாகிருஷ்ணனின் மனைவி பத்மஜா உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்.
உடல் நலக்குறைவால் கடந்த சில நாட்களாக கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகை பத்மஜா, இன்று அதிகாலை 1 மணியளவில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

68 வயதான அவருக்கு, ராஜ கிருஷ்ணன் என்ற மகனும் கார்த்திகா என்ற மகளும் இருக்கின்றனர். பத்மஜா மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...