தென்னிந்திய சினிமாவின் முக்கியமான நடிகைகளில் ஒருவரான ரம்யா கிருஷ்ணன், ‘பாகுபலி’ படத்தில் நடித்த சிவகாமி கதாப்பாத்திரம் அவரை இந்திய அளவில் கவனிக்க வைத்தது. இதற்கு முன்பு அவர் சில இந்தி திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தொடர்ந்து இந்தி சினிமாவில் கவனம் செலுத்தவில்லை. அதற்கு காரணம், அவர் நடித்த இந்தி திரைப்படங்கள் ஓடாதது தான் என்று கூறப்படுகிறது.
அதே சமயம், தென்னிந்திய சினிமாவில் அவருக்கு நல்ல வேடங்கள் கிடைத்ததால் இந்தி சினிமாவில் கவனம் செலுத்தவில்லை என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். மேலும், தற்போது அவர் அமிதாப் பச்சனுடன் நடிக்க இருக்கும் இந்தி திரைப்படம் சில பிரச்சினைகளினால் நின்றிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ”‘பாகுபலி’ படத்தில் இடம்பெற்ற சிவகாமி கதாப்பாத்திரத்தை மட்டுமே மையப்படுத்தி ஒரு படம் வந்தால் நடிப்பீர்களா?” என்று அவரிடம் கேட்டதற்கு, ”சிவகாமி கதாப்பாத்திரம் நான் நடித்த வேடங்களில் சிறப்பான ஒன்றாகும். அந்த வேடத்தை மையப்படுத்திய நல்ல கதையாக இருந்தால், எப்படி வேண்டாம் என்று சொல்வேன்” என்று பதில் அளித்துள்ளார்.
அதாவது, சிவகாமி கதாப்பாத்திரத்தை மையப்படுத்திய கதை என்றாலும் அது சாதாரணமானதாக அல்லாமல் ‘சரக்கு’ உள்ள கதையாக இருந்தால் நிச்சயம் நடிப்பேன், என்று ரம்யா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...