கொரோனா பிரச்சினையால் ஒட்டு மொத்த பொழுதுபோக்கு துறையே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சினிமா மட்டும் இன்றி சீரியல்கள் ஒளிபரப்பும் தடைபட்டதால் மக்கள் பெரிதும் அப்செட்டாகிவிட்டார்கள். இதற்கிடையே, ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்த அரசு, சீரியல் படப்பிடிப்புகளை நடத்த அனுமதி அளித்தது.
இதையடுத்து, பல சீரியல்களின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. அந்த வகையில், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘அழகு’ சீரியலின் படப்பிடிப்பும் சமீபத்தில் தொடங்கியது. இதில் அழகு என்ற வேடத்தில் ரேவதி நடித்து வருகிறார். அவரது கணவராக தலைவாசல் விஜய் நடிக்கிறார்.
இந்த நிலையில், ‘அழகு’ சீரியலில் இருந்து நடிகை ரேவதி வெளியேறிவிட்டதாக தகவல் வெளியாகியிருப்பதோடு, அவருக்கு பதில் ஊர்வசி அந்த வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...