தமிழகத்திலேயே சென்னையில் தான் கொரோனாவில் பாதிப்பு அதிகம் உள்ளது. இதற்காக நேற்று முதல் வரும் ஜூன் 30 ஆம் தேதி வரை சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தமிழ் திரையுலக பிரபலங்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே விஜயின் ‘தமிழன்’ படத்தை இயக்கிய மஜித், ‘இட்லி’ என்ற படத்தை இயக்கிய வித்தியாதரன் உள்ளிட்ட இயக்குநர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், சில தயாரிப்பாளர்கள் கொரோனாவால் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது
இந்த நிலையில், இயக்குநர் மிஷ்கின் மற்றும் நடிகர் அருண் விஜய் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தங்களது வீட்டுகளிலேயே சிகிச்சை மேற்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், இயக்குநர் மோகன்ராஜா மற்றும் அவரது தந்தையும், தயாரிப்பாளருமான எடிட்டர் மோகன் ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், இவர்களுக்கு கொரோனா பாதித்திருப்பதாக மாநகராட்சி அல்லது சுகாதாரத்துறையிடம் இருந்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான "தீமா தீமா" , “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...
காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...
’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...