Latest News :

வறுமையால் யாஷிகா ஆனந்த் எடுத்த அதிர்ச்சி முடிவு!
Saturday June-20 2020

கொரோனா ஊரடங்கினால் சினிமா துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு சில துறைகள் மீண்டும் செயல்பட தொடங்கினாலும், சினிமா துறையை பொருத்தவரையில், கொரோனாவுக்கு வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டால் தான் சகஜநிலை திரும்பும் என்ற கருத்து நிலவுகிறது.

 

இதற்கிடையே, சீரியல் படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கியிருக்கும் அரசு, 60 நபர்களை வைத்துக் கொண்டு படப்பிடிப்பு நடத்த வேண்டும், என்ற கட்டுப்பாட்டையும் விதித்துள்ளது. அதே சமயம், திரைப்பட படப்பிடிப்பு மீண்டும் தொடங்குவது குறித்து அரசு எந்தவித பரிசீலனையும் செய்யவில்லை. இதனால், திரைப்பட படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்குவது கேள்விக்குறியாகவே உள்ளது.

 

இதனால், சினிமா துறையில் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்படைந்த சில துணை நடிகர், நடிகைகள் வேறு சில பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், பிக் பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த், படப்பிடிப்பு இல்லாத காரணத்தால் வறுமையில் சிக்கியிருப்பதாகவும், அதில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள சீரியலில் நடிக்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

’இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் நடித்ததன் மூலம் அறியப்பட்ட யாஷிகா ஆனந்த், பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொண்டார். பிக் பாஸ் மூலம் தனக்கு பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று அவர் எதிர்ப்பார்த்த நிலையில், ஒரு சில பட வாய்ப்பு மட்டுமே அவருக்கு கிடைத்தது. தற்போது அந்த படங்களின் படப்பிடிப்புகல் நிறைவடைந்த நிலையில், புது பட வாய்ப்புகள் யாஷிகா ஆனந்துக்கு கிடைக்கவில்லை.

 

பட வாய்ப்புகள் இல்லை என்றாலும், கடை திறப்பு உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வதன் மூலம் சில லட்சங்களை கட்டணமாக பெற்று வந்தவர், ஊரடங்கினால் அவரது அந்த பொழப்பிலும் மண் விழுந்ததால் வறுமையில் சிக்கி தவித்துள்ளார். எனவே, வறுமையில் இருந்து தப்பிப்பதற்காக தனக்கு வந்த சீரியல் வாய்ப்புக்கு ஓகே சொல்லிவிட்டாராம்.

 

அதன்படி, பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘ரோஜா’ என்ற தொடரில் முக்கிய வேடம் ஒன்றில் நடிப்பதற்காக யாஷிகா ஆனந்த் ஒப்பந்தமாகியிருப்பதாக கூறப்படுகிறது.

Related News

6749

காமெடி நடிகர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ‘கலப்பை மக்கள் இயக்கம்’!
Thursday November-20 2025

பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...

’மாண்புமிகு பறை’ தலைப்பே ஆழமாக சிந்திக்க வைக்கிறது - தொல்.திருமாவளவன் பாராட்டு
Thursday November-20 2025

அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...

ஆதரவற்றோர் இல்லத்தில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அருண் விஜய்!
Wednesday November-19 2025

தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...

Recent Gallery