சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், சினிமா பிரபலங்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. பிரபல இயக்குநர் மிஷ்கின், நடிகர் அருண் விஜய், தயாரிப்பாளர் எடிட்டர் மோகன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தங்களது வீடுகளில் தனைமைப்படுத்தப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருவதாக தகவல் பரவி வருகிறது.
இந்த நிலையில், தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாராவும், அவரது காதலர் விக்னேஷ் சிவனும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலால் நயன்தாராவின் ரசிகர்கள் மட்டும் இன்றி திரையுலகினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருவதோடு, சென்னையில் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்தும் வருகிறார்கள். இருவருக்கும் இந்த வாருட இறுதியில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற இருப்பதாக கடந்த மாதம் தகவல் வெளியான நிலையில், தற்போது கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், திரையுலக பிரபலங்களுக்கு கொரோனா பாதிப்பு குறித்து மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை சார்பில் இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. மேலும், பலருக்கு அறிகுறி தென்படுவதால் தனிமைப்படுத்தப் பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
விஜய் சேதுபதி அவர்களின் மகன் சூர்யா விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் பீனிக்ஸ் படத்தை இயக்குனர் அனல் அரசு இயக்கியுள்ளார்...
ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் பெருமையுடன் தயாரித்து வழங்கும் ரொமாண்டிக் எண்டர்டெய்னர் திரைப்படம் 'ஓஹோ எந்தன் பேபி' இன் அசோசியேஷன் வித் குட் ஷோ...
ஜியோ ஹாட்ஸ்டார் - ஜிகேஎஸ் புரொடக்ஷன் - செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில் ஃபீல் குட் படமான 'பறந்து போ' ஜூலை 4 அன்று வெளியாகிறது...