சினிமா நடிகைகள் பலர் திருமண வயதை தாண்டியும் திருமணம் செய்துக் கொள்ளாமல் இருக்க, தற்போதைய நடிகைக சிலர் இளம் வயதிலேயே பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போதே திருமணம் செய்துக் கொள்கிறார்கள். திருமணத்திற்குப் பிறகு சில நடிகைகள் ஹீரோயினாக நடித்து வருவது தான் இதற்கு காரணம்.
இதற்கிடையே, கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற படம் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தா’. அறிமுக இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கிய இப்படத்தில் துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்க, ரிது வர்மா ஹீரோயினாக நடித்திருந்தார்.
இந்த நிலையில், நடிகை ரிது வர்மாவுக்கு திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய ரிது வர்மா, தன்னுடைய பெற்றோர் தன் திருமணத்திற்காக காத்திருப்பதாகவும், அதற்கு இன்னும் நேரம் இருக்கிறது, எனக்கு பொருத்தமானவரை கண்டுபிடித்ததும் திருமணம் செய்துகொள்வேன், காதல் திருமணத்தை எதிர்பார்க்கிறேன், என்று தெரிவித்துள்ளார்.

தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக உள்ள ரிது வர்மாவுக்கு தமிழிலும் ஏராளமான பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. ஊரடங்கு முடிந்த பிறகு ரிது வர்மாவை பல தமிழ்ப் படங்களில் பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் சிறுவர்களுக்கான படங்கள் மற்றும் சாகச காட்சிகள் நிறைந்த படங்களின் வருகை அரிதாக இருக்கும் நிலையில், இரண்டு அம்சங்களும் உள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் கவரக்கூடிய படமாக உருவாகியுள்ளது ‘மரகதமலை’...
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர இயக்குநரான லோகேஷ் கனகராஜ் - தன்னுடைய எதிர்கால திட்டங்கள் குறித்தும், தற்போது பணியாற்றி வரும் பணிகள் குறித்தும், தன் மீது சமூக வலைதளங்கள் மூலமாக முன்வைக்கப்பட்ட எதிர்மறை விமர்சனங்களுக்கு தன்னிலை விளக்கம் அளிக்கும் வகையிலும் சென்னையில் பத்திரிக்கையாளர் - ஊடகவியலாளர்களை சந்தித்தார்...
சங்கமித்ரன் புரொடக்ஷன்ஸ் மற்றும் அம்மன் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் சார்பில், என்...