Latest News :

இளம் நடிகைக்கு திருமண ஏற்பாடு!
Tuesday June-23 2020

சினிமா நடிகைகள் பலர் திருமண வயதை தாண்டியும் திருமணம் செய்துக் கொள்ளாமல் இருக்க, தற்போதைய நடிகைக சிலர் இளம் வயதிலேயே பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போதே திருமணம் செய்துக் கொள்கிறார்கள். திருமணத்திற்குப் பிறகு சில நடிகைகள் ஹீரோயினாக நடித்து வருவது தான் இதற்கு காரணம்.

 

இதற்கிடையே, கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற படம் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தா’. அறிமுக இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கிய இப்படத்தில் துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்க, ரிது வர்மா ஹீரோயினாக நடித்திருந்தார்.

 

இந்த நிலையில், நடிகை ரிது வர்மாவுக்கு திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய ரிது வர்மா, தன்னுடைய பெற்றோர் தன் திருமணத்திற்காக காத்திருப்பதாகவும், அதற்கு இன்னும் நேரம் இருக்கிறது, எனக்கு பொருத்தமானவரை கண்டுபிடித்ததும் திருமணம் செய்துகொள்வேன், காதல் திருமணத்தை எதிர்பார்க்கிறேன், என்று தெரிவித்துள்ளார்.

 

Actress Ritu Varma

 

தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக உள்ள ரிது வர்மாவுக்கு தமிழிலும் ஏராளமான பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. ஊரடங்கு முடிந்த பிறகு ரிது வர்மாவை பல தமிழ்ப் படங்களில் பார்க்கலாம்.

Related News

6757

சென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்கு ரூ.95 லட்சம் நிதி வழங்கிய தமிழக அரசு!
Friday December-12 2025

தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...

தி.மு.க வில் இணைந்தார் ‘புலி’ பட தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார்!
Thursday December-11 2025

திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...

தாடி பாலாஜிக்கு மருத்துவ உதவி! - ரூ.1 லட்சம் வழங்கிய பிடி செல்வகுமார்!
Thursday December-11 2025

சமீபத்திய மழையில் நனைந்த நடை பாதை வியபாரிகளுக்கும், ஏழை எளியவர்களுக்கும், பல உதவிகள் செய்த, கலப்பை மக்கள் இயக்க தலைவர் டாக்டர் பி...

Recent Gallery