சினிமா நடிகைகள் பலர் திருமண வயதை தாண்டியும் திருமணம் செய்துக் கொள்ளாமல் இருக்க, தற்போதைய நடிகைக சிலர் இளம் வயதிலேயே பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போதே திருமணம் செய்துக் கொள்கிறார்கள். திருமணத்திற்குப் பிறகு சில நடிகைகள் ஹீரோயினாக நடித்து வருவது தான் இதற்கு காரணம்.
இதற்கிடையே, கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற படம் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தா’. அறிமுக இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கிய இப்படத்தில் துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்க, ரிது வர்மா ஹீரோயினாக நடித்திருந்தார்.
இந்த நிலையில், நடிகை ரிது வர்மாவுக்கு திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய ரிது வர்மா, தன்னுடைய பெற்றோர் தன் திருமணத்திற்காக காத்திருப்பதாகவும், அதற்கு இன்னும் நேரம் இருக்கிறது, எனக்கு பொருத்தமானவரை கண்டுபிடித்ததும் திருமணம் செய்துகொள்வேன், காதல் திருமணத்தை எதிர்பார்க்கிறேன், என்று தெரிவித்துள்ளார்.

தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக உள்ள ரிது வர்மாவுக்கு தமிழிலும் ஏராளமான பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. ஊரடங்கு முடிந்த பிறகு ரிது வர்மாவை பல தமிழ்ப் படங்களில் பார்க்கலாம்.
மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில், புச்சி பாபு சானா ,இயக்கத்தில் உருவாகும், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பிரம்மாண்டமான பான்-இந்தியா கிராமத்து பின்னணியில் ஆக்சன் ஸ்போர்ட்ஸ் டிராமா திரைப்படமான “பெத்தி” படத்தின் இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது...
தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மகேந்திரன்...
வீர அன்பரசு எழுதி, இயக்கி, நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ‘கமாண்டோவின் லவ் ஸ்டோரி’...