Latest News :

படுக்கைக்கு மறுத்ததால் பட வாய்ப்புகளை இழந்தேன் - பிரபல தமிழ் நடிகை புகார்
Tuesday June-23 2020

திரையுலகில் ஒருவர் நடிகராகவே அல்லது நடிகையாகவோ வளர வேண்டும் என்றால் பல தடைகளையும், பல அரசியல்களையும் சந்திக்க உள்ளது. சமீபத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மன அழுத்தத்தால் தற்கொலை செய்துக் கொண்டதற்கு பின்னணியிலும், பல முன்னணி சினிமா பிரபலங்கள் அவரது வளர்ச்சியை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள், என்ற புகார் எழுந்தது.

 

அதேபோல், நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்றால் அவர்கள் படுக்கைகை பகிர்ந்துக் கொள்ள வேண்டும், என்று நிர்பந்தம் செய்யப்படுகிறார்கள். அதற்கு சம்மதிக்காததால் பலரது பட வாய்ப்புகள் பறிக்கப்படுவதாகவும் புகார் கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், பிரபல நடிகையான வித்யா பிரதீப், சுஷாந்த் சிங்கிற்கு நடந்தது போல தனக்கும் தமிழ் சினிமாவில் நடந்திருக்கிறது என்று கூறியிருக்கிறார். இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியவர், ”’தடம்’ படத்தில் நடிப்பதற்கு முன் 6 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தேன். இதனால் மகிழ்ச்சியாக இருந்தேன். ஆனால், திடீரென அந்த படங்களில் இருந்து என்னை நீக்கிவிட்டார்கள். தொழிலுக்கு சம்பந்தமில்லாத காரணங்களுக்காக நான் நீக்கப்பட்டேன். இதனால் நான் படிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கினேன்.” என்று தெரிவித்துள்ளார்.

 

Vidya Pradeep

 

தொழிலுக்கு சம்மந்தம் இல்லாத காரணத்தை கூறி தன்னை நீக்கிவிட்டதாக வித்யா பிரதீப் கூறியதற்கு, அவரை படுக்கைக்கு அழைத்ததாக தான் இருக்கும், என்று கூறப்படுகிறது. மேலும், இப்படி மீ டு புகார் கூறினால் தற்போது வரும் வாய்ப்புகளும் வராமல் போய்விடும் என்று தான், வித்யா பிரதீப் அதை மறைமுகமாக கூறியிருக்கிறார்.

 

’அவள் பெயர் தமிழரசி’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான வித்யா பிரதீப், ’தடம்’ உள்ளிட்ட பல படங்களில் தொடர்ந்து நடித்தவர் திடீரென்று பட வாய்ப்புகள் இல்லாததால் சீரியலில் நடிக்க தொடங்கினார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘நாயகி’ தொடரில் நடித்து வருகிறார்.

Related News

6758

’குறள்’ ஆக மாறிய நடிகை மமிதா பைஜூ!
Wednesday June-25 2025

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் கீர்தீஸ்வரன் இயக்கத்தில் பான் இந்தியன் படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘டூட்’(Dude)...

இயக்குநர் நெல்சன் நம்பிக்கையை காப்பாற்றி இருக்கிறார் - ‘டி.என்.ஏ’பட விழாவில் நடிகர் அத்ரவா பேச்சு
Wednesday June-25 2025

ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், தயாரிப்பாளர் எஸ்...

’சாருகேசி’ படம் வாழ்க்கையைப் பற்றி யோசிக்க வைத்தது - நடிகை சுஹாசினி நெகிழ்ச்சி
Tuesday June-24 2025

நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மேடை நாடகமான ‘சாருகேசி’ இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா திரைக்கதை இயக்கத்தில் திரைப்படமாக உருவாகியுள்ளது...

Recent Gallery