Latest News :

படுக்கைக்கு மறுத்ததால் பட வாய்ப்புகளை இழந்தேன் - பிரபல தமிழ் நடிகை புகார்
Tuesday June-23 2020

திரையுலகில் ஒருவர் நடிகராகவே அல்லது நடிகையாகவோ வளர வேண்டும் என்றால் பல தடைகளையும், பல அரசியல்களையும் சந்திக்க உள்ளது. சமீபத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மன அழுத்தத்தால் தற்கொலை செய்துக் கொண்டதற்கு பின்னணியிலும், பல முன்னணி சினிமா பிரபலங்கள் அவரது வளர்ச்சியை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள், என்ற புகார் எழுந்தது.

 

அதேபோல், நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்றால் அவர்கள் படுக்கைகை பகிர்ந்துக் கொள்ள வேண்டும், என்று நிர்பந்தம் செய்யப்படுகிறார்கள். அதற்கு சம்மதிக்காததால் பலரது பட வாய்ப்புகள் பறிக்கப்படுவதாகவும் புகார் கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், பிரபல நடிகையான வித்யா பிரதீப், சுஷாந்த் சிங்கிற்கு நடந்தது போல தனக்கும் தமிழ் சினிமாவில் நடந்திருக்கிறது என்று கூறியிருக்கிறார். இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியவர், ”’தடம்’ படத்தில் நடிப்பதற்கு முன் 6 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தேன். இதனால் மகிழ்ச்சியாக இருந்தேன். ஆனால், திடீரென அந்த படங்களில் இருந்து என்னை நீக்கிவிட்டார்கள். தொழிலுக்கு சம்பந்தமில்லாத காரணங்களுக்காக நான் நீக்கப்பட்டேன். இதனால் நான் படிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கினேன்.” என்று தெரிவித்துள்ளார்.

 

Vidya Pradeep

 

தொழிலுக்கு சம்மந்தம் இல்லாத காரணத்தை கூறி தன்னை நீக்கிவிட்டதாக வித்யா பிரதீப் கூறியதற்கு, அவரை படுக்கைக்கு அழைத்ததாக தான் இருக்கும், என்று கூறப்படுகிறது. மேலும், இப்படி மீ டு புகார் கூறினால் தற்போது வரும் வாய்ப்புகளும் வராமல் போய்விடும் என்று தான், வித்யா பிரதீப் அதை மறைமுகமாக கூறியிருக்கிறார்.

 

’அவள் பெயர் தமிழரசி’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான வித்யா பிரதீப், ’தடம்’ உள்ளிட்ட பல படங்களில் தொடர்ந்து நடித்தவர் திடீரென்று பட வாய்ப்புகள் இல்லாததால் சீரியலில் நடிக்க தொடங்கினார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘நாயகி’ தொடரில் நடித்து வருகிறார்.

Related News

6758

காமெடி நடிகர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ‘கலப்பை மக்கள் இயக்கம்’!
Thursday November-20 2025

பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...

’மாண்புமிகு பறை’ தலைப்பே ஆழமாக சிந்திக்க வைக்கிறது - தொல்.திருமாவளவன் பாராட்டு
Thursday November-20 2025

அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...

ஆதரவற்றோர் இல்லத்தில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அருண் விஜய்!
Wednesday November-19 2025

தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...

Recent Gallery