குடி போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய நடிகர் ஜெய்யை போலீசார் கைது செய்தனர். அவருடன் நடிகர் பிரேம்ஜியும் இருந்தார்.
இன்று அதிகாலை நடிகர்கள் ஜெய் மற்றும் பிரேம்ஜி மந்தைவெளியில் இருந்து அடையார் நோக்கி காரில் சென்ற போது, அடையாறு மேம்பாலத்தில் கார் விபத்துக்குள்ளானது.
விபத்து நடந்த இடத்திற்கு போலீசார் விரைந்த போது நடிகர் ஜெய் குடி போதையில் நிதானம் இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து குடிபோதையில் கார் ஓட்டிய ஜெய்யை போலீசார் கைது செய்து காரையும் மறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஜெய் சிறிது நேரத்தில் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த விபத்தில், ஜெய் மற்றும் பிரேம்ஜி ஆகியோருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...