குடி போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய நடிகர் ஜெய்யை போலீசார் கைது செய்தனர். அவருடன் நடிகர் பிரேம்ஜியும் இருந்தார்.
இன்று அதிகாலை நடிகர்கள் ஜெய் மற்றும் பிரேம்ஜி மந்தைவெளியில் இருந்து அடையார் நோக்கி காரில் சென்ற போது, அடையாறு மேம்பாலத்தில் கார் விபத்துக்குள்ளானது.
விபத்து நடந்த இடத்திற்கு போலீசார் விரைந்த போது நடிகர் ஜெய் குடி போதையில் நிதானம் இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து குடிபோதையில் கார் ஓட்டிய ஜெய்யை போலீசார் கைது செய்து காரையும் மறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஜெய் சிறிது நேரத்தில் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த விபத்தில், ஜெய் மற்றும் பிரேம்ஜி ஆகியோருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.
‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கே...
’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...
வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...