தொலைக்காட்சியில் இருந்து சினிமாவுக்கு எண்ட்ரியான நடிகைகள் சிலர் தற்போது பிஸியான நடிகையாக வலம் வருகிறார்கள். பிரியா பவானி சங்கர், வாணி போஜன் ஆகியோர் தொலைக்காட்சியில் இருந்து சினிமாவுக்குள் நுழைந்து வெற்றி பெற்றதை தொடர்ந்து மேலும் பல டிவி நடிகைகள் சினிமாவுக்குள் நுழைவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அந்த வகையில், சீரியல் நடிகை ஷிவாணி சினிமாவில் நடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். 2016 ஆம் ஆண்டு ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி சீசன் 3’ மூலம் சீரியலில் எண்ட்ரியான ஷிவானி, தற்போது ‘இரட்டை ரோஜா’, ‘பகல் நிலவு’ போன்ற சீரியல் மூலம் மக்களிடம் பிரபலமடைந்திருக்கிறார்.
மாடலிங் மற்றும் சீரியலில் கவனம் செலுத்தி வந்த ஷிவாணி, தற்போது சினிமாவில் நடிக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார். அதற்காக தனது கவர்ச்சிப் புகைப்படங்களை அவ்வபோது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். அதனால், இளைஞர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றிருக்கும் ஷிவாணியின் ஹாட் புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.




அறிமுக நடிகைகள் தேவல்ல கவிதா, அன்னா ஆஷா, கீர்த்தி, சங்கீதா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் ’எஸ் கே எஸ்’ (SKS) திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது...
தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது...
ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க, திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் ’ரூம் பாய்’...