முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியாவில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்தாலும், கொரோனாவின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், சாமாணிய மக்கள் முதல் சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் உள்ளவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
அந்த வகையில், இந்திய சினிமாவின் பிரபல நடிகரான அமிதாப் பச்சன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அமிதாப் பச்சனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, அமிதாப் பச்சனின் குடும்பத்தாருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது அவரது மகனும் பிரபல நடிகருமான அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் அமிதாப் பச்சன், கடந்த 10 நாட்களாக தன்னுடன் நெருக்கமாக இருந்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகனுக்கு கொரோனா தொற்று உறுதியான சம்பவம் பாலிவுட் சினிமாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அபிஷேக் பச்சனின் மனைவியான நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவரது பரிசோதனை ரிசல்ட் என்னவாக இருக்கும், என்ற எதிர்ப்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான "தீமா தீமா" , “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...
காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...
’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...