தமிழ் சினிமாவில் பிரபல ஒளிப்பதிவாளராக வலம் வந்த விஜய் மில்டன், ‘கோலி சோடா’ படம் மூலம் இயக்குநராக கோலிவுட்டின் பார்வையை தன் பக்கம் ஈர்த்தார். அப்படத்தை தொடர்ந்து, ‘10 என்றதுக்குள்ள;, ‘கடுகு’ போன்ற படங்களை இயக்கியவர் தற்போது கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாருடன் கைகோர்த்துள்ளார்.
முதல் முறையாக கன்னட திரைப்படத்தை இயக்கும் விஜய் மில்டன், தனது முதல் படத்திலேயே கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாரை இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். இதற்கு காரணம் அவருடைய கதை தான். சமீபத்தில், ‘டகுரு’ என்ற மாபெரும் வெற்றிப் படத்தை கொடுத்த சிவராஜ்குமார், அடுத்தப் படமும் வெற்றிப் படமாக இருக்க வேண்டும் என்பதற்காக கதை தேர்வில் கவனம் செலுத்தி வந்த நிலையில், விஜய் மில்டன் கூறிய கதை அவருக்கு பிடித்துவிட்டதாம். உடனே நடிக்க ஓகோ சொல்லிவிட்டார்.
மேலும், ‘டகரு’ படத்தில் சிவராஜ்குமாருக்கு வில்லனாக டாலி தனஞ்செயா என்பவர் நடித்தார். இவர்களது கூட்டணி பெரிய அளவில் பேசப்பட்டதோடு, மீண்டும் இவர்கள் இணைவதை கன்னட ரசிகர்கள் எதிர்ப்பார்த்து வந்த நிலையில், அதற்கான வாய்ப்பும் விஜய் மில்டன் படத்தில் அமைந்திருக்கிறது. இதனால், விஜய் மில்டன், சிவராஜ்குமார் இணையும் படத்திற்கு இப்போது கன்னட சினிமாவில் பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கிரிஷ்ணா கிரியேஷன்ஸ் சார்பில் கிருஷ்ணா சர்தக் மற்றும் ரஃப் நோட் நிறுவனம் சார்பில் விஜய் மில்டன் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்கள். இப்படத்தின் கதை, திரைக்கதை, எழுதி ஒளிப்பதிவு செய்து விஜய் மில்டன் இயக்க்கிறார். ஜெ.அனூப் சீலின் இசையமைக்கிறார்.
சிவராஜ்குமாரின் பிறந்தநாளான இன்று (ஜூலை 12) இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. படத்தின் தலைப்பு உள்ளிட்ட மற்ற விவரங்களை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளனர்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் கீர்தீஸ்வரன் இயக்கத்தில் பான் இந்தியன் படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘டூட்’(Dude)...
ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், தயாரிப்பாளர் எஸ்...
நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மேடை நாடகமான ‘சாருகேசி’ இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா திரைக்கதை இயக்கத்தில் திரைப்படமாக உருவாகியுள்ளது...