Latest News :

சூப்பர் ஸ்டாருடன் கைகோர்த்த ‘கோலி சோடா’ இயக்குநர்!
Sunday July-12 2020

தமிழ் சினிமாவில் பிரபல ஒளிப்பதிவாளராக வலம் வந்த விஜய் மில்டன், ‘கோலி சோடா’ படம் மூலம் இயக்குநராக கோலிவுட்டின் பார்வையை தன் பக்கம் ஈர்த்தார். அப்படத்தை தொடர்ந்து, ‘10 என்றதுக்குள்ள;, ‘கடுகு’ போன்ற படங்களை இயக்கியவர் தற்போது கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாருடன் கைகோர்த்துள்ளார்.

 

முதல் முறையாக கன்னட திரைப்படத்தை இயக்கும் விஜய் மில்டன், தனது முதல் படத்திலேயே கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாரை இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். இதற்கு காரணம் அவருடைய கதை தான். சமீபத்தில், ‘டகுரு’ என்ற மாபெரும் வெற்றிப் படத்தை கொடுத்த சிவராஜ்குமார், அடுத்தப் படமும் வெற்றிப் படமாக இருக்க வேண்டும் என்பதற்காக கதை தேர்வில் கவனம் செலுத்தி வந்த நிலையில், விஜய் மில்டன் கூறிய கதை அவருக்கு பிடித்துவிட்டதாம். உடனே நடிக்க ஓகோ சொல்லிவிட்டார்.

 

மேலும், ‘டகரு’ படத்தில் சிவராஜ்குமாருக்கு வில்லனாக டாலி தனஞ்செயா என்பவர் நடித்தார். இவர்களது கூட்டணி பெரிய அளவில் பேசப்பட்டதோடு, மீண்டும் இவர்கள் இணைவதை கன்னட ரசிகர்கள் எதிர்ப்பார்த்து வந்த நிலையில், அதற்கான வாய்ப்பும் விஜய் மில்டன் படத்தில் அமைந்திருக்கிறது. இதனால், விஜய் மில்டன், சிவராஜ்குமார் இணையும் படத்திற்கு இப்போது கன்னட சினிமாவில் பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

Shivrajkumar and Dolly Dhanajayan

 

கிரிஷ்ணா கிரியேஷன்ஸ் சார்பில் கிருஷ்ணா சர்தக் மற்றும் ரஃப் நோட் நிறுவனம் சார்பில் விஜய் மில்டன் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்கள். இப்படத்தின் கதை, திரைக்கதை, எழுதி ஒளிப்பதிவு செய்து விஜய் மில்டன் இயக்க்கிறார். ஜெ.அனூப் சீலின் இசையமைக்கிறார்.

 

சிவராஜ்குமாரின் பிறந்தநாளான இன்று (ஜூலை 12) இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. படத்தின் தலைப்பு உள்ளிட்ட மற்ற விவரங்களை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளனர்.

Related News

6775

காமெடி நடிகர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ‘கலப்பை மக்கள் இயக்கம்’!
Thursday November-20 2025

பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...

’மாண்புமிகு பறை’ தலைப்பே ஆழமாக சிந்திக்க வைக்கிறது - தொல்.திருமாவளவன் பாராட்டு
Thursday November-20 2025

அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...

ஆதரவற்றோர் இல்லத்தில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அருண் விஜய்!
Wednesday November-19 2025

தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...

Recent Gallery