Latest News :

ஐஸ்வர்யா ராய்க்கு கொரோனா! - அதிர்ச்சியில் திரையுலகம்
Sunday July-12 2020

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

 

இதற்கிடையே பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகனும் நடிகருமான அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அபிஷேக் பச்சனின் மனைவியான ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட அவரது குடும்பத்தாருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

 

இந்த நிலையில், ஐஸ்வர்யா ராயின் கொரோனா பரிசோதனை முடிவு வெளியாகியுள்ளது. அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், அபிஷேக் - ஐஸ்வர்யா ராயின் மகள் ஆரத்யாவுக்கும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அதே சமயம், அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சனுக்கு கொரோனா தொற்று இல்லை என்று முடிவு வந்திருக்கிறது.

 

இந்திய சினிமா மட்டும் இன்றி ஹாலிவுட் சினிமாவிலும் நன்கு அறியப்பட்ட நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பது சினிமா உலகினை மட்டும் இன்றி ரசிகர்களிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related News

6777

காமெடி நடிகர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ‘கலப்பை மக்கள் இயக்கம்’!
Thursday November-20 2025

பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...

’மாண்புமிகு பறை’ தலைப்பே ஆழமாக சிந்திக்க வைக்கிறது - தொல்.திருமாவளவன் பாராட்டு
Thursday November-20 2025

அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...

ஆதரவற்றோர் இல்லத்தில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அருண் விஜய்!
Wednesday November-19 2025

தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...

Recent Gallery