Latest News :

ஐஸ்வர்யா ராய்க்கு கொரோனா வந்தது இதனால் தானாம்!
Monday July-13 2020

பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு கடந்த 11 ஆம் தேத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

 

அதனப்டி, அபிஷேக்கின் மனைவி ஐஸ்வர்யா ராய், அவரது மகள் மற்றும் அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சன் ஆகியோருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது குழந்தைக்கு முதலில் நெகடிவ் என்று ரிசல்ட் வந்ததால் ரசிகர்கள் நிம்மதியடைந்த நிலையில், மீண்டும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்தது. இதனால் ஒட்டு மொத்த திரையுலகமே அதிர்ச்சியடைந்தது.

 

இதையடுத்து ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்களுக்கு கொரோனா தொற்று குறைவாக இருக்கிறதாம். ஆனால், அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சனுக்கு தொற்று அதிகமாக இருப்பதால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

இதற்கிடையே, அமிதாப் பச்சனுக்கு சொந்தமான நான்கு பங்களாக்களை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்ததோடு, அங்கு பணியாற்றி ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்துள்ளனர்.

 

இந்த நிலையில், அமிதாப் பச்சன் குடும்பத்திற்கு கொரோனா பாதிப்பு எப்படி வந்தது, என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது அபிஷேக் பச்சன் வெப் சீரிஸ் ஒன்றின் டப்பிங் பணிக்காக அடிக்கடி ஸ்டுடியோவுக்கு சென்று வந்துள்ளார். அதன் மூலமாகவே அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும், அவர் மூலமாகவே ஐஸ்வர்யா ராய் மற்றும் அமிதாப் பச்சனுக்கும் தொற்று பரவி இருப்பதாக கூறப்படுகிறது.

Related News

6781

காமெடி நடிகர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ‘கலப்பை மக்கள் இயக்கம்’!
Thursday November-20 2025

பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...

’மாண்புமிகு பறை’ தலைப்பே ஆழமாக சிந்திக்க வைக்கிறது - தொல்.திருமாவளவன் பாராட்டு
Thursday November-20 2025

அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...

ஆதரவற்றோர் இல்லத்தில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அருண் விஜய்!
Wednesday November-19 2025

தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...

Recent Gallery