Latest News :

ஐஸ்வர்யா ராய்க்கு கொரோனா வந்தது இதனால் தானாம்!
Monday July-13 2020

பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு கடந்த 11 ஆம் தேத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

 

அதனப்டி, அபிஷேக்கின் மனைவி ஐஸ்வர்யா ராய், அவரது மகள் மற்றும் அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சன் ஆகியோருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது குழந்தைக்கு முதலில் நெகடிவ் என்று ரிசல்ட் வந்ததால் ரசிகர்கள் நிம்மதியடைந்த நிலையில், மீண்டும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்தது. இதனால் ஒட்டு மொத்த திரையுலகமே அதிர்ச்சியடைந்தது.

 

இதையடுத்து ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்களுக்கு கொரோனா தொற்று குறைவாக இருக்கிறதாம். ஆனால், அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சனுக்கு தொற்று அதிகமாக இருப்பதால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

இதற்கிடையே, அமிதாப் பச்சனுக்கு சொந்தமான நான்கு பங்களாக்களை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்ததோடு, அங்கு பணியாற்றி ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்துள்ளனர்.

 

இந்த நிலையில், அமிதாப் பச்சன் குடும்பத்திற்கு கொரோனா பாதிப்பு எப்படி வந்தது, என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது அபிஷேக் பச்சன் வெப் சீரிஸ் ஒன்றின் டப்பிங் பணிக்காக அடிக்கடி ஸ்டுடியோவுக்கு சென்று வந்துள்ளார். அதன் மூலமாகவே அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும், அவர் மூலமாகவே ஐஸ்வர்யா ராய் மற்றும் அமிதாப் பச்சனுக்கும் தொற்று பரவி இருப்பதாக கூறப்படுகிறது.

Related News

6781

’குறள்’ ஆக மாறிய நடிகை மமிதா பைஜூ!
Wednesday June-25 2025

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் கீர்தீஸ்வரன் இயக்கத்தில் பான் இந்தியன் படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘டூட்’(Dude)...

இயக்குநர் நெல்சன் நம்பிக்கையை காப்பாற்றி இருக்கிறார் - ‘டி.என்.ஏ’பட விழாவில் நடிகர் அத்ரவா பேச்சு
Wednesday June-25 2025

ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், தயாரிப்பாளர் எஸ்...

’சாருகேசி’ படம் வாழ்க்கையைப் பற்றி யோசிக்க வைத்தது - நடிகை சுஹாசினி நெகிழ்ச்சி
Tuesday June-24 2025

நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மேடை நாடகமான ‘சாருகேசி’ இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா திரைக்கதை இயக்கத்தில் திரைப்படமாக உருவாகியுள்ளது...

Recent Gallery