’புரியாத புதிர்’ மற்றும் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ ஆகிய படங்களை இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடி மூன்றாவதாக இயக்கும் படம் ‘யாருக்கும் அஞ்சேல்’. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தில் கதையின் நாயகியாக பிந்து மாதவி நடிக்கிறார். அவருடன் தர்ஷனா பாணிக் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
கொரோனா பாதிப்புக்கு முன்பே இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தாலும், கொரோனாவின் தீவிரத்தினால் பின்னணி வேலைகள் தடைபட்டது. இதையடுத்து அரசு சினிமா பின்னணி வேலைகளுக்கு அதுமதி அளித்ததை தொடர்ந்து, அரசு அறிவித்த பாதுகாப்பு விதிமுறைகளின்படி சமீபத்தில் ‘யாருக்கும் அஞ்சேல்’ படத்தின் பின்னணி வேலைகள் தொடங்கியது. அதன்படி, பிந்து மாதவி இன்று தனது டப்பிங் பணிகளை தொடங்கினார்.

தர்ட் ஐ என்ட்டர்டெயின்மெண்ட் சார்பில் தேவராஜூலு மார்கண்டேயன் தயாரிக்கும் இப்படத்தில் பிந்து மாதவியும் தர்ஷனா பாணிக்கும் துணிச்சல் மிக்க சகோதரிகளாக நடித்திருக்கின்றனர். சவால் மிகுந்த ஊட்டியின் தட்பவெட்ப சூழ்நிலைகளை வெற்றிகரமாக எதிர்கொண்டு, தொடர்ந்து முப்பது நாட்கள் ஒரே மூச்சில் படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கிறது படக்குழு.
ஊட்டியில் உள்ள தங்கள் பாரம்பரிய சொத்தை விற்பனை செய்வதற்காக வெளிநாட்டிலிருந்து வரும் சகோதரிகள் இருவருக்கும் ஏற்படும் உயிருக்கு ஆபத்தான பிரச்னைகளையும், அவர்கள் அதை எவ்வாறு எதிர்கொண்டு போராடுகிறார்கள் என்பதை விறுவிறுப்பாக சொல்வது தான் ‘யாருக்கும் அஞ்சேல்’ படத்தின் கதை.
பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான "தீமா தீமா" , “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...
காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...
’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...