Latest News :

”எதை எதையோ வாங்கி கொடுத்தேன்” - காஜல் மீது புகார் கூறிய இயக்குநர் மோகன்
Wednesday July-15 2020

‘திரெளபதி’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறியப்பட்ட இயக்குநர் மோகனுக்கும், பிக் பாஸ் புகழ் காஜலுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் கருத்து மோதல் கோலிவுட்டின் சமீபத்திய பரபரப்பாகியுள்ளது. வனிதாவின் திருமணத்தை சுற்றி வந்த சோசியல் மீடியா சர்ச்சை தற்போது, மோகன் - காஜல் ஆகியோர் பக்கம் திரும்பியுள்ளது.

 

இதற்கு காராணம், மோகனின் முதல் திரைப்படமான ‘பழைய வண்ணாரப்பேட்டை’ படத்தில் நடித்த காஜலுக்கு, படப்பிடிப்பின் போது மோகன், பல பொருட்களை வாங்கி கொடுத்ததாக தெரிவித்திருப்பதோடு, அது குறித்து லிஸ்ட் வேண்டுமா? என்று கேட்டது தான் காரணம்.

 

அப்படி மோகன் கேட்டதற்கு அர்த்தம், அவர் காஜலுக்கு மது வாங்கிக் கொடுத்தார், என்று சூசகமாக கூறுவதாக நெட்டிசன்கள் கூறி கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதே சமயம், ஆம், நான் குடிப்பேன், இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், எனக்கு எப்போது மோகன் சரக்கு வாங்கிக் கொடுத்தார், என்று காஜல் பதிலடி கொடுத்திருக்கிறார்.

 

இவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலுக்கு காரணம், இயக்குநர் மோகன், சமீபத்தில், கொரோனா வைரஸை ராமன் அழிக்க போவது போன்ற ஒரு பதிவை மோகன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இந்த ட்வீட்டுக்கு கமெண்ட் தெரிவித்த நடிகை காஜல், ”என்ன சொல்ல வரார் இந்த சூத்திரன் என்று அவாளால் அழைக்கப்படும் இவர்” என்று கிண்டலடித்தார்.

 

காஜலின் இந்த கிண்டலால் கடுப்பான மோகன், ”என்னங்க மேடம்.. வேலை வெட்டி இல்லாம போச்சா.. விளம்பரம் தேவைபடுதா.. இப்படி குறுக்கு வழியில வராம திறமைய நம்பி உழைங்க.. வழியில நல்ல குணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.. நல்வாழ்வு அமைய வாழ்த்துக்கள்.”என்று பதில் அளித்தார்.

 

இதற்கு பதில் அளித்த காஜல், ”யாருங்க குறுக்குவழி பத்தி பேசுறது, குறுக்கு வழியில் போய் இருந்தா இப்படி வெட்டியா இருக்க மாட்டேன் சார். எப்பவோ தமிழ் டிவின்னு ஒன்னு ஆரம்பிச்சு இருப்பேன். உங்க பழைய வண்ணாரப்பேட்டை படத்துக்கு ஃப்ரீயா தான் நடித்துக் கொடுத்தேன் யார் காள்லையும் நான் விழல” என்று பதில் அளித்தார்.

 

அதற்கு மோகன், இவவசமாகவா.. சுயநினைவு இருக்கா மேடம்.. என்ன என்ன எல்லாம் வாங்கி கொடுத்தேன், தினம் எவ்வளவு சம்பளம் கொடுத்தேன்னு லிஸ்ட் சொல்லனுமா.. அன்று காட்டிய கொடுத்தேன்னு கண்ணியம் இன்றும் உண்டு என்னிடம்.. அதனால் சொல்லி காட்ட விரும்பல.. கவனமாக இருங்க உங்க ரசிகர்களிடம் என்று பதில் அளித்தார்.

 

இப்படி இருவருக்குமான கருத்து மோதல் தற்போது வளர்ந்துக் கொண்டிருக்க, இதற்கு ரசிகர்களும் கமெண்ட் போட்டு வருவதால், வனிதா - சூர்யா தேவி போல சோசியல் மீடியாவில் இன்னொரு மோதல் உருவாகி வருகிறது.

Related News

6791

காமெடி நடிகர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ‘கலப்பை மக்கள் இயக்கம்’!
Thursday November-20 2025

பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...

’மாண்புமிகு பறை’ தலைப்பே ஆழமாக சிந்திக்க வைக்கிறது - தொல்.திருமாவளவன் பாராட்டு
Thursday November-20 2025

அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...

ஆதரவற்றோர் இல்லத்தில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அருண் விஜய்!
Wednesday November-19 2025

தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...

Recent Gallery