விஜயின் ‘மாஸ்டர்’ படத்திற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். அதே சமயம், மாஸ்டர் நேரடியாக ஒடிடி-யில் ரிலீஸ் ஆகப்போவதாக அவ்வபோது தகவல்கள் வெளியாக, அதை தயாரிப்பு தரப்பும் மறுத்து வருகிறது. இதற்கிடையே, ஆகஸ்ட் மாதம் திரையரங்குகள் திறக்க அரசு அனுமதி வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படி திரையரங்கங்கள் திறக்கப்பட்டால் முதல் படமாக ‘மாஸ்டர்’ படத்தை ரிலீஸ் செய்ய திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளார்கள்.
இதற்கிடையே விஜயின் புதிய படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் சன் பிக்சர்ஸ் கடந்த சில மாதன்களுக்கு முன்பு வெளியிட்டது. இப்படத்தில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸு கேட்ட சம்பள தொகையில் பாதியை மட்டுமே தர முடியும், என்று சன் பிக்சர்ஸ் கராராக கூறி விட்டது. அதற்கு முருகதாஸும் ஓகே சொன்ன பிறகு தான் படத்தின் அறிவிப்பே வெளியிடப்பட்டதாம்.
அதே போல், விஜயின் சம்பளம் குறித்தும் சன் பிக்சர்ஸ் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வந்ததாம். தற்போதைய சூழலில் விஜய் கேட்கும் சம்பளத்தை கொடுத்தால், இழப்பு தான் ஏற்படும் என்று கூறிய சன் பிக்சர்ஸ் சம்பளத்தை குறைத்துக் கொள்ளுமாறு விஜயிடம் கூறியுள்ளது. ஆனால், விஜய் சம்பளத்தை குறைக்க முடியாது, என்று கூறி விட்டதால் சன் பிக்சர்ஸ் விஜய் படத்தை கைவிட்டு விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், விஜய்க்கு பதிலாக சூர்யா நடிக்கும் படத்தை தயாரிக்க முடிவு செய்திருக்கும் சன் பிக்சர்ஸ், அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிட இருக்கிறதாம். இந்த படத்தை பாண்டிராஜ் இயக்குகிறாராம்.
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...