தமிழ் சினிமாவில் பாடகியாகவும், நடிகையாகவும் வலம் வந்த ஆண்ட்ரியா, ‘தரமணி’ என்ற வெற்றி படத்தின் மூலம் நல்ல நடிகை என்று பாராட்டப்பட்டாலும், அப்படத்திற்குப் பிறகு அவருக்கு வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் கடுப்பாகி பல கருத்துக்களை பகிர்ந்து வந்தவர், திடீரென்று காணாமால் போய்விட்டார்.
இதற்கிடையே அரசியல் வாரிசு நடிகர் ஒருவருடன் தான் நெருங்கி பழகியதால் உடல் மற்றும் மன ரீதியாக பாதிக்கப்பட்டேன் என்றும் அதனால் சில மாதங்கள் சிகிச்சை பெற்றேன், என்றும் கூறிய ஆண்ட்ரியா, அந்த நபர் யார்? என்பதை அறிவிக்கப் போவதாகவும் கூறினார். ஆண்ட்ரியா கூறிய நபர் யார்? என்று பல யூகங்கள் வெளியான நிலையில், அந்த நபர் பற்றி ஆண்ட்ரியா எதுவும் சொல்லாமல் மவுனம் காத்தார்.
அதே சமயம், ஆண்ட்ரியாவுக்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இதற்கு காரணம், ஆண்ட்ரியா அரசியல் வாரிசு பற்றி வெளியிட்ட சர்ச்சை தகவல்களே காரணம், என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில், திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காததால் குறும்படங்களில் நடிக்க ஆண்ட்ரியா முடிவு செய்துள்ளாராம். அதன்படி, முன்னணி நிறுவனம் ஒன்றுக்கு ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான ராஜீவ் மேனன் இயக்கும் குறும்படத்தில் ஆண்ட்ரியா நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளாராம். இந்த குறும்படத்துடன் மேலும் சில இணைய தொடர்களிலும் நடிக்க ஆண்ட்ரியா நடிக்க ஒப்பந்தமாகியிர்ப்பதால் அவரை இனி ஒடிடி தளத்தில் தாராளமாக பார்க்கலாம், என்று கூறப்படுகிறது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் கீர்தீஸ்வரன் இயக்கத்தில் பான் இந்தியன் படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘டூட்’(Dude)...
ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், தயாரிப்பாளர் எஸ்...
நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மேடை நாடகமான ‘சாருகேசி’ இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா திரைக்கதை இயக்கத்தில் திரைப்படமாக உருவாகியுள்ளது...