தமிழ் சினிமாவில் பாடகியாகவும், நடிகையாகவும் வலம் வந்த ஆண்ட்ரியா, ‘தரமணி’ என்ற வெற்றி படத்தின் மூலம் நல்ல நடிகை என்று பாராட்டப்பட்டாலும், அப்படத்திற்குப் பிறகு அவருக்கு வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் கடுப்பாகி பல கருத்துக்களை பகிர்ந்து வந்தவர், திடீரென்று காணாமால் போய்விட்டார்.
இதற்கிடையே அரசியல் வாரிசு நடிகர் ஒருவருடன் தான் நெருங்கி பழகியதால் உடல் மற்றும் மன ரீதியாக பாதிக்கப்பட்டேன் என்றும் அதனால் சில மாதங்கள் சிகிச்சை பெற்றேன், என்றும் கூறிய ஆண்ட்ரியா, அந்த நபர் யார்? என்பதை அறிவிக்கப் போவதாகவும் கூறினார். ஆண்ட்ரியா கூறிய நபர் யார்? என்று பல யூகங்கள் வெளியான நிலையில், அந்த நபர் பற்றி ஆண்ட்ரியா எதுவும் சொல்லாமல் மவுனம் காத்தார்.
அதே சமயம், ஆண்ட்ரியாவுக்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இதற்கு காரணம், ஆண்ட்ரியா அரசியல் வாரிசு பற்றி வெளியிட்ட சர்ச்சை தகவல்களே காரணம், என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில், திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காததால் குறும்படங்களில் நடிக்க ஆண்ட்ரியா முடிவு செய்துள்ளாராம். அதன்படி, முன்னணி நிறுவனம் ஒன்றுக்கு ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான ராஜீவ் மேனன் இயக்கும் குறும்படத்தில் ஆண்ட்ரியா நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளாராம். இந்த குறும்படத்துடன் மேலும் சில இணைய தொடர்களிலும் நடிக்க ஆண்ட்ரியா நடிக்க ஒப்பந்தமாகியிர்ப்பதால் அவரை இனி ஒடிடி தளத்தில் தாராளமாக பார்க்கலாம், என்று கூறப்படுகிறது.
பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான "தீமா தீமா" , “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...
காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...
’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...