இயக்குநர் பாரதிராஜா இன்று 77 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள். இயக்குநரும் தயாரிப்பாளருமான நாஞ்சில் பி.சி.அன்பழகன், பாரதிராஜாவுக்கு தனது கவிதை மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து கவிதை இதோ,
அரங்கத்து
அகல் விளக்காக
இருந்த
தமிழ் சினிமாவை...
கிராமாயணம்
படிக்க வைத்து
நிலவில்
இறக்கி வைத்தவர்..
நீங்களும்
இளையராஜாவும்
அன்பு யென்று
எனை
அழைக்கும் போது,
சுனை நீராய்
நிரம்புகிறேன்..
புரட்சித் தலைவர்
நூற்றாண்டு விழா குழுவில்...
உங்களோடும்
பாக்கியராஜ்யோடும்
பணி புரிந்தது
குருகுல
நறுமண மகிழ்ச்சி...
காற்றாய்
புகழ் நிலைத்திருக்கட்டும்!
கடலாய்
கற்பனைகள்
பொங்கி வழியட்டும்...
தாகம்
கொண்டநதியே
சலங்கை கட்டும்
விலை வைக்கப்பட்ட
உங்கள் கார்களோடு...
விலை மதிப்பில்லா
ஆஸ்காரும் இணைந்து
தமிழகத்திற்கு புகழ் சேர்க்கும்...
ராஜாக்களால்
கலை
புதுசா பூத்த
ரோசாவாக மணக்கிறது
கூழாங்கற்களையும்
சிலையாக்கும்
உங்கள் -
விழி உளி்...
உங்களை
சந்தித்த
சாதராண மனிதனும்..
உறை வாள்
உயர் தர
கலைஞானாகி விடுவான்...
புகழுக்குரியவரை
கடந்து செல்கையில்
தலைகளும்
தன்னிச்சையாக
வணங்கும்.
பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான "தீமா தீமா" , “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...
காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...
’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...