சின்னத்திரை நயன்தாரா என்று அழைக்கப்படும் பிரபல சீரியல் நடிகை வாணி போஜன், தற்போது வெள்ளித்திரை நடிகையாகி விட்டார். வாணி போஜனின் முதல் படமான ‘ஓ மை கடவுளே’ மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.
இந்த நிலையில், வாணி போஜனை சினிமாவில் முதல் முறையாக அறிமுகப்படுத்திய திரைப்படமும் விரைவில் வெளியாக உள்ளது. அதாவது, வாணி போஜன் ‘லாக்கப்’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருந்தார். ஆனால், இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனதால், அவரது இரண்டாவது படம் ரிலீஸாகிவிட்டது.
எப்படியோ, வாணி போஜனின் முதல் திரைப்படமான ‘லாக்கப்’ வரும் ஆக்ஸ்ட் 14 ஆம் தேதி முன்னணி ஒடிடி தளமான ZEE5-ல் வெளியாகிறது.

நடிகர் நிதின் சத்யா தயாரித்திருக்கும் ‘லாக்கப்’ படத்தில் ஹீரோவாக வைபவ் நடிக்க, மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் இயக்குநர் வெங்கட் பிரபு நடித்திருக்கிறார். இவர்களுடன் பூர்ணா, ஈஸ்வரி ராவ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
அறிமுக இயக்குநர் எஸ்.ஜி.சார்லஸ் இயக்கத்தில் சஸ்பென்ஸ் திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு அரோல் குரோலி இசையமைத்திருக்கிறார். சந்தானம் சேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆனந்த் ஜெரால்ட் படத்தொகுப்பு செய்துள்ளார். ஆனந்த மணி கலையை நிர்மாணித்துள்ளார்.
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...