Latest News :

சிட்னியுடன் இணைந்த நடிகை சோனியா அகர்வால்! - குவியும் வாழ்த்து
Saturday July-25 2020

’காதல் கொண்டேன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமான சோனியா அகர்வால், தொடர்ந்து ‘7ஜி ரெயின்போ காலணி’, ‘திருட்டுப்பயலே’, ’புதுப்பேட்டை’, ‘மதுர’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்து பிஸியான நடிகையாக இருந்த போதே இயக்குநர் செல்வராகவனை காதல் திருமணம் செய்துக் கொண்டார்.

 

2006 செல்வராகவனை திருமணம் செய்துக் கொண்ட சோனியா அகர்வால், 2010 ஆம் ஆண்டு அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றதோடு, அவரிடம் ரூ.2 கோடி இழப்பீடாக பெற்றுக் கொண்டார். இதையடுத்து மீண்டும் சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் காட்டிய சோனியா அகர்வாலுக்கு விவேக்குக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும், அவர் எதிர்ப்பார்த்தபடி கதாநாயகி வாய்ப்பு கிடைக்காததால், கிடைத்த வாய்ப்புகளில் நடித்து வந்தவருக்கு, அந்த வாய்ப்புகளும் குறைந்தது.

 

இருப்பினும், தெலுங்கு, மலையாளம் என்று பிற மொழிகளிலும் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த சோனியா அகர்வால், தற்போதைய ஊரடங்கினால் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருந்தார். இதற்கிடையே தனது நண்பர்களுடன் இணைந்து புதிய தொழிலில் ஈடுபடும் முயற்சியில் இறங்கியவர், திரிஷா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பல சினிமா நடிகைகளுக்கு ஆடை வடிவமைப்பாளராக இருக்கும் பிரபல ஆடை வடிவமைப்பாளரான சிட்னி ஸ்லேடனுடன் இணைந்து புதிய தொழில் ஒன்றை தொடங்கியுள்ளார்.

 

Tale of Two

 

’டேல் ஆப் டூ’ (Tale of two) என்ற பெயரில் சோனியா அகர்வாலும் அவரது நண்பர்களுடன் தொடங்கியுள்ள இந்த நிறுவனம், திருமண நிகழ்ச்சிகளை வழக்கமாக அல்லாமல் கிரியேட்டிவாக செய்துக் கொடுக்கும். இந்த நிறுவனத்தில் சோனியா அகர்வால் திருமண வடிவமைப்பு இயக்குநராக பொறுப்பேற்றுள்ளார். சிட்னி ஸ்லேடன் ஸ்டைலிங் இயக்குநராக பொறுப்பேற்றுள்ளார். இவர்களுடன் ஆனந்த் பால்கி என்பவர் நிறுவன இயக்குநராகவும், அவரது மனைவி பிரியதர்ஷினி விற்பனை இயக்குநராகவும் பொறுப்பேற்றுள்ளார்.

 

இன்று பூஜையுடன் ஆரம்பமாகியுள்ள சோனியா அகர்வால், சிட்னி ஸ்லேடன், ஆனந்த் பால்கி மற்றும் பிரியதர்ஷினி ஆனந்த் ஆகியோரது இந்நிறுவனத்திற்கு பிரபலங்கள் பலர் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

 

Related News

6832

காமெடி நடிகர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ‘கலப்பை மக்கள் இயக்கம்’!
Thursday November-20 2025

பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...

’மாண்புமிகு பறை’ தலைப்பே ஆழமாக சிந்திக்க வைக்கிறது - தொல்.திருமாவளவன் பாராட்டு
Thursday November-20 2025

அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...

ஆதரவற்றோர் இல்லத்தில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அருண் விஜய்!
Wednesday November-19 2025

தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...

Recent Gallery