Latest News :

’மெர்சல்’ படத்திற்கு நீதிமன்றம் தடை - முழு பின்னணி!
Friday September-22 2017

விஜயின் ‘மெர்சல்’ படத்தின் டீசர் நேற்று மாலை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அப்படத்திற்கு விளம்பரம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

 

ராஜேந்திரன் என்பவர் கடந்த 2014 ஆம் ஆண்டு ‘மெர்சலாயிட்டேன்’ என்ற தலைப்பை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்ததோடு, அந்த தலைப்பில் தனது இளையமகனை ஹீரோவாக வைத்து படத்தை தயாரிக்கும் ஏற்பாடுகளையும் செய்துள்ளார்.

 

நடிகர் நடிகைகள் மற்றும் படப்பிடிப்பு தளங்களுக்கு முன் பணம் கொடுத்து, படத்தின் வேலைகளை விரைவில் தொடங்க உள்ள அவர், விஜய் படத்திற்கு ‘மெர்சல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதால், தனது படத்திற்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்று கூறி தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், ‘மெர்சல்’ என்ற வார்த்தைக்கு ஸ்ரீ தேனாண்டாள் நிறுவனம் டிரேட் மார்க் வாங்கியிருப்பதால் தனது படத்திற்கு சிக்கல் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

இதையடுத்து, தயாரிப்பாளர் ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ‘மெர்சல்’ படத்திற்கு எதிராக தொடர்ந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி, அக்டோபர் 3 ஆம் தேதி வரை ‘மெர்சல்’ தலைப்பில் படத்தை விளம்பரப்படுத்த கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.

 

Related News

684

காதலர்களின் பெற்றோர்களை பற்றி எழுத தவறி விடுவோம் - இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் ஆதங்கம்
Friday October-31 2025

ஸ்ரீ லட்சுமி ட்ரீம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் டாக்டர் ஆர்...

”ஆதித்யா புதுமுகம் போல இல்லை” - நாயகனை பாராட்டிய கெளரி கிஷன்
Friday October-31 2025

கிராண்ட் பிக்சர்ஸ் (Grand Pictures) நிறுவனத்தின் தயாரிப்பில், அப் 7 வெஞ்சர்ஸ் ஆதிராஜ் புருஷோத்தமன் இணைத் தயாரிப்பில், அபின் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகியுள்ள மெடிக்கல் கிரைம் த்ரில்லர் திரைப்படம் ’அதர்ஸ்’...

”சினிமாவில் அதிகரிக்கும் பிளாக் மெயில்” - ’வள்ளுவன்’ பட விழாவில் ஆர்.கே.செல்வமணி வருத்தம்
Thursday October-30 2025

ஆறுபடை புரொடக்சன்ஸ் சார்பில் ஷைல்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வள்ளுவன்’...

Recent Gallery