Latest News :

’மெர்சல்’ படத்திற்கு நீதிமன்றம் தடை - முழு பின்னணி!
Friday September-22 2017

விஜயின் ‘மெர்சல்’ படத்தின் டீசர் நேற்று மாலை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அப்படத்திற்கு விளம்பரம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

 

ராஜேந்திரன் என்பவர் கடந்த 2014 ஆம் ஆண்டு ‘மெர்சலாயிட்டேன்’ என்ற தலைப்பை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்ததோடு, அந்த தலைப்பில் தனது இளையமகனை ஹீரோவாக வைத்து படத்தை தயாரிக்கும் ஏற்பாடுகளையும் செய்துள்ளார்.

 

நடிகர் நடிகைகள் மற்றும் படப்பிடிப்பு தளங்களுக்கு முன் பணம் கொடுத்து, படத்தின் வேலைகளை விரைவில் தொடங்க உள்ள அவர், விஜய் படத்திற்கு ‘மெர்சல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதால், தனது படத்திற்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்று கூறி தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், ‘மெர்சல்’ என்ற வார்த்தைக்கு ஸ்ரீ தேனாண்டாள் நிறுவனம் டிரேட் மார்க் வாங்கியிருப்பதால் தனது படத்திற்கு சிக்கல் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

இதையடுத்து, தயாரிப்பாளர் ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ‘மெர்சல்’ படத்திற்கு எதிராக தொடர்ந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி, அக்டோபர் 3 ஆம் தேதி வரை ‘மெர்சல்’ தலைப்பில் படத்தை விளம்பரப்படுத்த கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.

 

Related News

684

கதை தேர்வு மூலம் வியக்க வைக்கும் அர்ஜூன் தாஸ்!
Saturday September-13 2025

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...

சக்தி ஃபிலிம் பேக்டரி நிறுவனத்துடன் வெற்றியை கொண்டாடிய ‘காந்தி கண்ணாடி’ படக்குழு!
Saturday September-13 2025

இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...

விஜய் ஆண்டனி என் குடும்பத்தில் ஒருவர் - ஷோபா சந்திரசேகர் பெருமிதம்
Saturday September-13 2025

விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...

Recent Gallery