பிக் பாஸ் மூலம பிரபலமான மீரா மிதுன், சில திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருக்கிறார். தற்போது தமிழ் சினிமாவில் உள்ள குடும்ப சினிமா குறித்து சமூக வலைதளங்களில் பேசி வருபவர், நடிகர்கள் விஜய், சூர்யா ஆகியோர் பற்றி இழிவாக பேசுவதோடு, அவர்களது மனைவி குறித்தும் மிக ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டு வருகிறார்.
இதையடுத்து மீரா மிதுனுக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், விஜய் மற்றும் சூர்யா ரசிகர்களும் சமூக வலைதளங்களில் அவரை கிண்டல் செய்வதோடு, ஆபாசமான வார்த்தைகளில் அர்ச்சணை செய்தும் வருகிறார்கள்.
இந்த நிலையில், சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக மீரா மிதுன் கைது செய்யப்பட்டதாக பிரபல தொலைக்காட்சி செய்தி வெளியிட்டிருக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த செய்தி சேனலின் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிடப்பட்ட இந்த செய்தியை, தற்போது ரீட்விட் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஜோ மைக்கேல் என்பவர், மீரா மிதுன் படுக்கையை பகிர்ந்துக் கொண்டு தான் பிக் பாஸ் வாய்ப்பு பெற்றார், என்று குற்றம் சாட்டியதோடு, அவர் பலரிடம் உடலுறவு வைத்துக் கொள்வதோடு, அதன் மூலமாகவே அவர் சினிமா, மாடலிங் வாய்ப்புகளை பெற்று வருகிறார், என்றும் குற்றம் சாட்டியுள்ள நிலையில், மீரா மிதுன் விபச்சார வழக்கில் கைதான அந்த செய்தியும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆனால், உண்மையிலேயே அந்த செய்தி சேனல் வெளியிட்ட தகவலா அல்லது அதைப்போன்று உருவாக்கப்பட்ட போலியானதா என்பது தெரியவில்லை.
🤣🤣🤣 pic.twitter.com/wh7lVaiC8u
— MADHAVAN29.Srt.10... (@Madhava52852628) August 8, 2020
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...