நடிகர், நடிகைகள் குறித்து சிலர் விமர்சித்து ஆபாசமாக பேசுவது சமூக வலைதளங்களில் அதிகரித்து வருகிறது. மேலும், இதில் சில நடிகைகள் தொடர்ந்து ஈடுபடுவது கோலிவுட்டினரை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. அந்த வகையில், மீரா மிதுன் நடிகர்கள் சூர்யா மற்றும் விஜய் பற்றியும், அவர்களது மனைவிகள் பற்றியும் மிகவும் ஆபாசமாக பேசி வருகிறார். இதற்கு பல கண்டனமும் தெரிவித்து வருகிறார்கள்.
இதற்கிடையே, மீரா மிதுன் ஆபாசமாக பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும், என்று நடிகை ஷாலு ஷம்மு பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இதனை தொடர்ந்து ஷாலு ஷம்முவுக்கு பதில் அளித்த மீரா மிதுன், “நீ விரைவில் ஜெயிலுக்கு போக போகிறாய், அதனால் வழக்கறிஞரை பார்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதுடன், அவரை ரவுடி கும்பலை சேர்ந்தவர் என்றும் விமர்சித்தார்.
மீரா மிதுனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஷாலு ஷம்மு வீடியோ ஒன்றை வெளியிட்டதோடு, அவருக்கு எதிராக தான் எடுக்க இருக்கும் நடவடிக்கை குறித்தும் கூறியிருக்கிறார்.
ஆக, சோசியல் மீடியாவில் அடுத்த குழாயடி சண்டை தொடங்கிவிட்டது. அதன் ஆரம்பமான வீடியோ இதோ,
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...